நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது- பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: நாட்டை கட்டியெழுப்பும் கடினமாக பாதையை பாஜக தேர்ந்தெடுத்து வேகமாக பயணித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவிகித குழாய் நீர் விநியோகத்தை குறிக்கும் வகையில் கோவா அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பனாஜியில் நடைபெற்ற விழாவில் கோவா முதமைச்சர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளாக மூன்று கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், பாஜக அரசு கூடுதலாக ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி பேச்சு
10 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம். நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, 16 கோடி கிராமப்புற குடும்பங்கள் வேறு நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர். இவ்வளவு பெரிய மக்கள் தொகை போராடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

பாஜகவின் திட்டம்
அதனால் இந்த திட்டத்திற்காக ரூ.3.60 லட்சம் கோடி செலவிடப்பட்டு வருகிறது. 100 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய தொற்றுநோயால் குறுக்கீடுகள் ஏற்பட்டாலும், திட்டத்தின் வேகம் குறையவில்லை. ஒரு அரசை நிறுவுவதற்கு கடின உழைப்பு தேவையில்லை. ஆனால் ஒரு நாட்டை கட்டியெழுப்ப நிச்சயம் கடின உழைப்பு தேவை. பாஜக அரசு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. எனவே நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறோம்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்
தேசத்தின் நீர் பாதுகாப்பு குறித்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். நாட்டைப் பற்றி கவலைப்படாதவர்கள், நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை கெடுப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் மிகப்பெரிய விஷயங்கள் பற்றி பேச முடியும். ஆனால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தொலைநோக்குடன் முடிவை எட்ட முடியாது.

ஜல் ஜீவம் திட்டம்
ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, பங்குதாரர்களின் ஆர்வம், அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தியது ஆகியவையே காரணம் என்று தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications