தனியார் மருத்துவமனைகள் பெற்றது 1.29 கோடி தடுப்பூசிகள்.. யூஸ் பண்ணியதோ வெறும் 22 லட்சம்.. ஷாக் தகவல்
டெல்லி: மே மாதத்தில் மட்டும் தனியார் மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றன. அதில் 22 லட்சம் மட்டுமே பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது என்றே கூறலாம். சில வாரங்களுக்கு முன்பு தினமும் 3,00,000-ஐ தாண்டி சென்ற தொற்று தற்போது 90,000-க்கும் கீழே சென்று விட்டது.
கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதமான தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு
தொடக்க காலத்தில் தடுப்பூசிகள் போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசி மீது அதிகம் சந்தேகம் கொண்டனர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் வீணாகிப் போயின. தற்போது தடுப்பூசிகள் போடுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் போதிய தடுப்பூசிகள் இல்லை.

வீணாக்கிய தனியார் மருத்துவமனைகள்
தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மே மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு தடுப்பூசிகள் பெற்ற போதிலும் அதில் 17 சதவீத அளவு மட்டுமே பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஜூன் 4 ம் தேதி சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பின்படி மே மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 7.4 கோடி தடுப்பூசி அளவுகள் கிடைத்தன.

வெறும் 22 லட்சம் மட்டுமே
அவற்றில் 1.85 கோடி டோஸ் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றன. அதில் வெறும் 22 லட்சம் மட்டுமே மக்களுக்கு போடப்பட்டுள்ளன. அதாவது வாங்கிய அளவில் வெறும் 7 சதவீத அளவு தடுப்பூசிகள் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தியதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம் என்ன?
நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. இதனை ஒப்பிடுகையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகள் செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications