50 லட்சம் இந்தியர்கள் மத்திய அரசின் தவறான முடிவால் இறந்துள்ளனர்... ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: மத்திய அரசின் "தவறான முடிவுகள்" காரணமாக கொரோனா (கோவிட் -19 ) நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது சுமார் 50 லட்சம் இந்தியர்கள் இறந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டில் இதுவரை 4.18 லட்சம் பேர் கொரோனா நோயால் இறந்துள்ளதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஆனால் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் "சென்டர் ஃபார் குலோபல் டெவலெப்மென்ட்" நடத்திய புதிய ஆய்வை பகிர்ந்து இருந்தார். இந்த ஆய்வை மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார வல்லுநர்கள் அபிஷேக் ஆனந்த், ஜஸ்டின் சான்டபர் ஆகியோர் இணைந்து நடத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இது தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து ஜூன் 2021 வரை மூன்று வெவ்வேறு தரவு மூலங்களை ஆய்வு செய்து அதிக இறப்புகள் நடந்ததாக பதிவு செய்திருந்தது.
அதை ரீடுவிட் செய்த ராகுல் காந்தி, அதற்கு மேல் "உண்மை. கொரோனா இரண்டாவது அலையின் போது இந்திய அரசின் தவறான முடிவுகள் காரணமாக எங்களின் 50 லட்சம் சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் இறந்துவிட்டார்கள்" என்று கூறியிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு எந்த இழப்பீடும் தேவையில்லை என்று கூறி மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.
" விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும் எந்தவிதமான இழப்பீடும் இல்லை. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் கண்ணீரில்தான் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று இந்தியில் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில் 'விவசாயிகள் போராட்டம்' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications