ராகுல் காந்திக்கு பொண்ணு பாருங்கப்பா.. “இப்படி” இருந்தால் ஓகேவாம்! இந்திரா பாதி.. சோனியா பாதி
டெல்லி: ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் நோக்கி ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை துணையாக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு இருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் அரசியல் கடந்து பல தனிப்பட்ட விசயங்கள் தொடர்பான சுவாரஸ்யமான பதில்களை அளித்தார்.
அவர் மோட்டார் பைக்குகள் தொடர்பாகவும், தனக்கு பிடித்த கார்கள் குறித்தும் பேசிய அவர், சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் மலைகளில் ஏறும் எலெக்ட்ரிக் பைக்குகள் தயாரித்ததை பாராட்டினார்.

எலெட்க்ரிக் ஸ்கூட்டர்கள்
"நான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டி இருக்கிறேன். ஆனால் எலெக்ட்ரிக் பைக்குகளை ஓட்டியது இல்லை. நீங்கள் இந்த சீன நிறுவனத்தை பார்த்து இருக்கிறீர்களா? அவை எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கூடிய சைக்கிள் மற்றும் மலை பைக்குகள். மிகவும் அருமையான சிந்தனை. சிறப்பாகவும் உள்ளன." என்று தெரிவித்தார் ராகுல் காந்தி.

கார்கள் பிடிக்குமா?
தொடர்ந்து பேசிய அவர் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், தான் சென்று வரும் ஹோண்டா CR-V கார் தன்னுடைய தாயுடையது எனவும் கூறினார். "எனக்கு கார்களின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மோட்டார் பைக்குகள் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால், மோட்டார் பைக்குகள் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். கார்களை பழுதுபார்க்க தெரியும், ஆனால், அதில் ஆர்வம் இல்லை. வேகமாக செல்வது காற்றில் செல்வது, நீரில் செல்வது, நிலத்தில் செல்வதற்கான ஐடியா எனக்கு பிடிக்கும்." என்றார்.

வாரிசு விமர்சனம்
வாரிசு என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாடுகள் குறித்து பதிலளித்த ராகுல் காந்தி, "எனக்கு அதை பற்றி கவலை இல்லை. நீங்கள் அவ்வாறு சொல்ல நினைத்தாலும் அது பெரிய விசயம் இல்லை. நான் யாரையும் வெறுக்கவில்லை. நீங்கள் என்னை அவமதித்தாலும், ஏன் என்னை தாக்கினாலும் கூட நான் உங்களை வெறுக்க மாட்டேன்." என்றார்.

பப்பு பற்றி பேச்சு
பப்பு என்று தான் அழைக்கப்படுவது குறித்து பேசிய ராகுல் காந்தி, "அவரது வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவரது வாழ்க்கையில் உறவுகள் சரியாக இல்லை என்பதாக் சோகமாக உள்ளார். அதன் காரணமாகவே மற்றவர்களை அவர் இழிவுபடுத்தி வருகிறார். பரவாயில்லை இருக்கட்டும். நான் அதை வரவேற்கிறேன். மேலும் இழிவுபடுத்தட்டும். நான் விரும்புகிறேன்.

இந்திரா காந்தி குறித்து நெகிழ்ச்சி
எனக்கு மேலும் பல பெயர்களை வைத்திடுங்கள். நான் நிதானமாகவே இருப்பேன்." என்றார். தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய பாட்டியும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை தன்னுடைய இரண்டாவது தாய் என்று கூறிய ராகுல் காந்தி, தன்னுடைய வாழ்வில் அன்பிற்குரியவர் என அவர் குறித்து நெகிழ்ந்தார்.

எப்படிப்பட்ட மனைவி வேண்டும்?
அப்போது நெறியாளர் இந்திரா காந்தியை போன்ற ஒரு மனைவி வந்தால் திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.. நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், என்னுடைய தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் குணங்களின் கலவையாக இருந்தால் நல்லது." என்றார்.












Click it and Unblock the Notifications