நேதாஜிக்கு கவுரவம்.. இனி நேதாஜி பிறந்த நாளில் தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம்.. முக்கிய முடிவு
டெல்லி: குடியரசு தின நிகழ்ச்சிகள் இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையும் உள்ளடக்கும் வகையில் ஜன 23 முதலே கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்று நடைபெறும் முப்படைகளின் அணி வகுப்பும், மாநிலங்களின் பிரமாண்ட அணி வகுப்பும் நடைபெறுவது வழக்கம்.

நேதாஜி
வழக்கமாக நமது நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24ஆம் தேதி முதலே தொடங்கிவிடும். இந்தச் சூழலில் இந்த ஆண்டு முதல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி முதல் குடியரசு தின விழா கொண்டாட்டங்களைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மிக விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23இல் பிறந்தவர்.

என்ன காரணம்
இந்தியாவின் கொண்டாட்டங்கள் அனைத்தும் நமது கலாசாரம் மற்றும் வரலாற்றையும் உள்ளடக்கி, அவற்றையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என நரேந்திர மோடி அரசு விரும்புவதாகவும் எனவே அதன் அடிப்படையிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

முக்கியமானவர்
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான மற்றும் துணிச்சலான தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒடிசாவின் கட்டாக் நகரில் பிறந்தவர். இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி, அதற்காக ஒரே ராணுவத்தையே கட்டமைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை கொண்ட இணையதளத்தையும் அவர் தங்கிய முக்கிய இடங்களையும் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நாட்கள்
நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம திவாஸ் (சாதனை நாள்) நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆகஸ்ட் 14இல் பிரிவினை துன்ப தினம், அக்டோபர் 31இல் தேசிய ஒற்றுமை தினம் (சர்தார் படேலின் பிறந்த நாள்), நவம்பர் 15இல் ஜன்ஜாதியா கவுரவ் திவாஸ் (பிர்சா முண்டாவின் பிறந்த நாள்), நவம்பர். 26இல் அரசியலமைப்பு தினம், டிசம்பர் 26இல் வீர் பால் திவாஸ் (குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களுக்கு அஞ்சலி) அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications