நேதாஜிக்கு கவுரவம்.. இனி நேதாஜி பிறந்த நாளில் தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம்.. முக்கிய முடிவு
டெல்லி: குடியரசு தின நிகழ்ச்சிகள் இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையும் உள்ளடக்கும் வகையில் ஜன 23 முதலே கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்று நடைபெறும் முப்படைகளின் அணி வகுப்பும், மாநிலங்களின் பிரமாண்ட அணி வகுப்பும் நடைபெறுவது வழக்கம்.

நேதாஜி
வழக்கமாக நமது நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24ஆம் தேதி முதலே தொடங்கிவிடும். இந்தச் சூழலில் இந்த ஆண்டு முதல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி முதல் குடியரசு தின விழா கொண்டாட்டங்களைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மிக விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23இல் பிறந்தவர்.

என்ன காரணம்
இந்தியாவின் கொண்டாட்டங்கள் அனைத்தும் நமது கலாசாரம் மற்றும் வரலாற்றையும் உள்ளடக்கி, அவற்றையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என நரேந்திர மோடி அரசு விரும்புவதாகவும் எனவே அதன் அடிப்படையிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

முக்கியமானவர்
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான மற்றும் துணிச்சலான தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒடிசாவின் கட்டாக் நகரில் பிறந்தவர். இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி, அதற்காக ஒரே ராணுவத்தையே கட்டமைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை கொண்ட இணையதளத்தையும் அவர் தங்கிய முக்கிய இடங்களையும் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நாட்கள்
நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம திவாஸ் (சாதனை நாள்) நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆகஸ்ட் 14இல் பிரிவினை துன்ப தினம், அக்டோபர் 31இல் தேசிய ஒற்றுமை தினம் (சர்தார் படேலின் பிறந்த நாள்), நவம்பர் 15இல் ஜன்ஜாதியா கவுரவ் திவாஸ் (பிர்சா முண்டாவின் பிறந்த நாள்), நவம்பர். 26இல் அரசியலமைப்பு தினம், டிசம்பர் 26இல் வீர் பால் திவாஸ் (குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களுக்கு அஞ்சலி) அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications