மோடி 3.0..359 தொகுதிகளில் பாஜக.. ’இந்தியா’வுக்கு 154..REPUBLIC- PMARQ கருத்துக் கணிப்பு முடிவுகள்
டெல்லி: லோக் சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், REPUBLIC- PMARQ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி பாஜக 359 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது.
இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு பீகார் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் காலை 7:00 மணிக்கு தொடங்கி நிலையில் 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ரிபப்ளிக்- பி மார்க் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 5.8 லட்சம் மக்களிடையே நடத்தப்பட்டது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி,"பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 359 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது இந்தியா கூட்டணி 154 தொகுதிகளிலும் மற்றவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ரிபப்ளிக் - பி-மார்க் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications