வியாபாரிகளை தாக்கும் சங்கீகள்.. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் பிரதமர் மோடி.. ஓவைசி கடும் விமர்சனம்
டெல்லி: வங்கதேசத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், ‛‛மத உணர்வுகளுக்காக இந்தியாவில் மாடு விற்கும் முஸ்லிம் வியாபாரிகளை சங்கீகள் தாக்குவதோடு , மாநில அரசுகள் மாட்டிறைச்சியை தடை செய்கின்றன. ஆனால் ஏற்றுமதி மூலம் பணம் சம்பாதிப்பதில் பிரதமர் மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் இந்த ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யும் நாடுகளில் அண்டை நாடான வங்கதேசமும் ஒன்று. இந்நிலையில் தான் சமீபத்தில் இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை வங்கதேசம் நிறுத்தியது.

உள்நாட்டு இறைச்சிக்காக..
அதாவது உள்நாட்டு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மாட்டிறைச்சி விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்தது. அதோடு 2021-22 பட்ஜெட்டில் 20 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக வர்த்தக அமைச்சகம் சார்பில் கடந்த 2022 ஏப்ரலில் 2021-24 இறக்குமதி கொள்கைப்படி மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய கால்நடைத்துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்திய தூதரகம் கடிதம்
இந்நிலையில் தான் வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அந்நாட்டின் மீன்வளம் மற்றும் கால்நடை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ‛‛மாட்டிறைச்சி இறக்குமதி தடையால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கதேச இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய மாட்டிறைச்சி மற்றும் செம்மறியாட்டு இறைச்சி ஏற்றுமதியாளர்கள் சங்கம், வங்கேதேச இறைச்சி இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் ஆகியவற்றின் சிக்கலை தீர்க்க பரிசீலிக்க வேண்டும்'' என கூறப்பட்டு உள்ளது.

ஓவைசி விமர்சனம்
இந்நிலையில் தான் இதனை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் மாட்டிறைச்சி உணவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்து சம்பாதிப்பதில் பிரதமர் மோடி குறியாக உள்ளதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அசாதுதீன் ஓவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மோடிக்கு பிரச்சனை இல்லை
இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதியை தொடங்க வங்கதேசத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மாடு விற்கும் முஸ்லிம் வியாபாரிகளை சங்கீகள் தாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதோடு மாநில அரசுகள் மாட்டிறைச்சியை தடை செய்வதோடு, இறைச்சி கூடங்களை மூடுகின்றன. ஆனால் பெரிய வியாபாரிகளுக்கு பணம் சம்பாதிக்க அரசு உதவுகிறது. மத உணர்வுகளுக்காக இங்கு இறைச்சி கடைகள் மூடப்பட்டாலும் கூட மாட்டிறைச்சி மூலம் பணம் சம்பாதிப்பதில் மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications