370-வது பிரிவு நீக்கம் தொடர்பாக நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள் என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்பது குறித்தும் விவாதம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. தற்போது இப்பிரிவு நீக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதிதான் என்கிற நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். அதேநேரத்தில் 370-வது பிரிவு நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடரவே முடியாது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு 370-வது பிரிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்தது. அதில், 370-வது பிரிவு என்பது நிரந்தரமானது; இதை மாற்றவும் நீக்கவும் முடியாது என தெரிவித்திருந்தது.
அதே 2015-ல் 370-வது பிரிவு குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விசாரித்த தலைமை நீதிபதி தத்து, 370-வது பிரிவு விவகாரத்தில் நாடாளுமன்றம் மட்டும்தான் முடிவு எடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தால் இந்த விவகாரத்தில் தலையிடவே முடியாது என்றார்.
அத்துடன் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், 370-வது பிரிவு தற்காலிகமானது அல்ல எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனால் 370-வது பிரிவை நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர இயலுமா? இயலாதா? என விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் தெரிவிக்க இருக்கும் கருத்து மிகவும் முக்கியத்துவமானதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications