அரசியலில் அதிரடி ட்விஸ்ட்! திடீரென மோடியை சந்தித்த சரத் பவார்.. குழப்பத்தில் சிவசேனா, காங்கிரஸ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் முன்னறிவிப்பின்றி சந்தித்து பேசி இருப்பது மகாராஷ்டிர மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சி, தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.
மகா விகாஸ் அகாடி என்ற அந்த கூட்டணி உருவான பின்னர் பாஜகவுக்கு எதிராக சிவசேனா கட்சியினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

அடுத்தடுத்து குறிவைக்கப்படும் தலைவர்கள்
இந்த நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த மகாராஷ்டிரா தலைவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அம்மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் பழைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

மோடியுடன் பவார் திடீர் சந்திப்பு
இப்படி அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைக்கு மகாராஷ்டிரா ஆளும் கூட்டணி தலைவர்கள் இலக்காகி வரும் சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். இரு தலைவர்கள் 20 முதல் 25 நிமிடங்கள் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எந்தவிதமான முன்னறிவிப்பும் வழங்கப்படாததே சொந்த கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தெரியாது என்று சொல்லும் அஜித் பவார்
மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவாரும் இந்த சந்திப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "எனக்கு இந்த சந்திப்பு பற்றி தெரியாது. எனக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால்தானே சொல்ல முடியும். ஒரு நாட்டின் பிரதமரும் ஒரு தேசியக் கட்சியின் தலைவரும் சந்திக்கிறார்கள் என்றால் அது வளர்ச்சி பற்றியதாகவே இருக்கும். விவாதிப்பதற்கு பல முக்கிய விசயங்கள் உள்ளன. இருவரும் பெரும் தலைவர்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது." என்றார்.

"அமலாக்கத்துறை ரெய்டு பற்றி பேசி இருப்பார்"
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவருமான பிரவின் டரேகர் பேசியதாவது, "பாஜக, தேசியவாத காங்கிரஸ் இடையே எந்த கசப்புணர்வும் இல்லை. மகா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2 தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் உள்ளனர். சில சிவசேனா தலைவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரதமர் சரத் பவார் சந்தித்ததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்." என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications