கூட்டுறவு கூட்டாட்சி பெயரில் மாநில உரிமைகளை புல்டோசர் கொண்டு நசுக்குகிறது மத்திய அரசு: மமதா அட்டாக்
டெல்லி: கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை புல்டோசர் கொண்டு நசுக்குகிறது மத்திய அரசு என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
நீட், ஜேஇஇ தேர்வுகள், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்கள் மமதா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஹேமந்த் சோரன், பூபேஷ் பாகல், அமரீந்தர்சிங், நாராயணசாமி, கெலாட் ஆகியோர் பங்கேற்றனர்.

வீடியோ கான்ஃபரன்ஸில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
நீட், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பரில் நடைபெற உள்ளன. நாம் நமது மாணவர்களின் வாழ்க்கையை ஏன் பணயம் வைக்க வேண்டும்?
நாம் மாணவர்களை மனரீதியாக துன்புறுத்துகிறோம். ஜனநாயகத்தில் பலவிதமான ஒடுக்குமுறைகளை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை. தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாம் நமது குழந்தைகளுக்காக பேச வேண்டியது உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. நமது கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்காத நிலையில் நாம் அனைத்து மாநிலங்களுமே ஒன்றாக இணைந்து உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியதுதான்.
கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை புல்டோசர் கொண்டு நசுக்கி வருகிறது மத்திய அரசு. கூட்டாட்சி அமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாம் சுதந்திரமாக பகிரங்கமாக பேச முடியவில்லை. ஃபேஸ்புக் தொடங்கி கருத்து சுதந்திரம் எங்குமே இல்லை.
மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ53,000 கோடி நிலுவை வைத்துள்ளது. ஆனால் இதுபற்றி நாம் பேச முடியாது. மத்திய அரசின் ஏஜென்சிகளை நமக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள்.
இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications