டெல்லி விமான நிலையத்துக்குள் தோட்டா.. ஆசிரியருக்கு வித்தியாசமான தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம் அதிரடி
டெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டு கொண்டு சென்ற ஆசிரியருக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை வழங்கி உள்ளது.
டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர் கடந்த 2008- 2009 ம் ஆண்டில் உத்தரகாண்டில் உள்ள சமோலி நகரில் அமைந்து இருக்கும் பள்ளியில் பிடித்து வந்தார்.
இந்த வேளையில் அவர் சாலையில் கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்து வைத்து கொண்டார். மேலும் அந்த குண்டுடன் அவர் டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் நுழைந்தார்.

ரத்து செய்யக்கோரி வழக்கு
இந்த சந்தர்ப்பத்தில் அவரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அவர் ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

தீர்ப்பு வழங்கல்
இந்த மனுவில், ‛‛பள்ளி படிப்பின்போது கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்து வைத்து கொண்ட நான் உள்நோக்கம் ஏதுமின்றி மறதியாக கொண்டு சென்றுவிட்டேன். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார். இந்த மனு மீது நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரணை நடத்தினார். இதையடுத்து நீதிபதி ஜஸ்மீத் சிங் வித்தியாசமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளார்.

வித்தியாசமான தீர்ப்பு
அதன்படி ‛‛ஆசிரியர் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. ஆனாலும் இந்த வழக்கில் போலீசாரின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் சமூக பணி ஒன்றையாற்ற வேண்டும். ஒவ்வொரு பணி நாளின்போதும் படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக கூடுதலாக 2 மணிநேரம் பள்ளியில் வகுப்பு எடுக்க வேண்டும். இதனை ஒரு மாதம் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவு
மேலும் ஆசிரியர் வகுப்பு எடுக்கிறாரா என்பதை கல்வி இயக்குனரகம் கண்காணிக்க வேண்டும். அதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு வகுப்புக்கான ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டும் என அவர் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications