டெல்லி விமான நிலையத்துக்குள் தோட்டா.. ஆசிரியருக்கு வித்தியாசமான தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம் அதிரடி
டெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டு கொண்டு சென்ற ஆசிரியருக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை வழங்கி உள்ளது.
டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர் கடந்த 2008- 2009 ம் ஆண்டில் உத்தரகாண்டில் உள்ள சமோலி நகரில் அமைந்து இருக்கும் பள்ளியில் பிடித்து வந்தார்.
இந்த வேளையில் அவர் சாலையில் கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்து வைத்து கொண்டார். மேலும் அந்த குண்டுடன் அவர் டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் நுழைந்தார்.

ரத்து செய்யக்கோரி வழக்கு
இந்த சந்தர்ப்பத்தில் அவரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அவர் ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

தீர்ப்பு வழங்கல்
இந்த மனுவில், ‛‛பள்ளி படிப்பின்போது கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்து வைத்து கொண்ட நான் உள்நோக்கம் ஏதுமின்றி மறதியாக கொண்டு சென்றுவிட்டேன். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார். இந்த மனு மீது நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரணை நடத்தினார். இதையடுத்து நீதிபதி ஜஸ்மீத் சிங் வித்தியாசமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளார்.

வித்தியாசமான தீர்ப்பு
அதன்படி ‛‛ஆசிரியர் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. ஆனாலும் இந்த வழக்கில் போலீசாரின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் சமூக பணி ஒன்றையாற்ற வேண்டும். ஒவ்வொரு பணி நாளின்போதும் படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக கூடுதலாக 2 மணிநேரம் பள்ளியில் வகுப்பு எடுக்க வேண்டும். இதனை ஒரு மாதம் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவு
மேலும் ஆசிரியர் வகுப்பு எடுக்கிறாரா என்பதை கல்வி இயக்குனரகம் கண்காணிக்க வேண்டும். அதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு வகுப்புக்கான ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டும் என அவர் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications