ராம்சேது பற்றி பொய் தகவல்.. அக்ஷய் குமார் படத்துக்கு எதிர்ப்பு.. வழக்கு தொடரும் சுப்பிரமணியசாமி
டெல்லி: நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ‛ராம்சேது' படத்தில் ராம்சேது(ராமர்பாலம்) பற்றி தவறான சித்தரிப்பு உள்ளதாகவும், இதனால் வழக்கு தொடர இருப்பதாகவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தி மொழியில் உருவாகும் படம் ராம் சேது. நடிகையாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். படத்தை அபிேஷக் சர்மா இயக்கி வருகிறார்.
இந்த படத்தை கர்மா மீடியா எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தீபாவளியையொட்டி அக்டோபர் மாதம் 24ம் தேதி வெளியீட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்சேது படத்தின் போஸ்டர்
இந்நிலையில் படத்தை பிரபலப்படுத்துவதற்கான பணியை தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‛ராம்சேது' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. ராம்சேது (ராமர்பாலம்) உண்மையானதா அல்லது கட்டுக்கதையா என்பதை கண்டுபிடிக்கும் வகையிலான தொல்பொருள் ஆய்வு அடிப்படையில் கதைக்களம் இருப்பதாக கூறப்படுகிறது.

கிளம்பிய சர்ச்சை
இதற்கிடையே தான் தற்போது ‛ராம்சேது' படம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. படத்தில் ராமர் பாலம் குறித்து பொய்யான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமியும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளார்.

வழக்கு தொடர முடிவு
இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், "ராம்சேது தொடர்பான தவறான சித்தரிப்பால் இழப்பீட்டுக்கான வழக்கு தொடர்பாக எனது கூட்டாளியான சத்ய சபர்வாலுடன் ஆலோசனை செய்துள்ளேன். கர்மா மீடியா மற்றும் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரின் படத்தில் ராமர் பாலம் பற்றி பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழக்கு தொடரப்பட உள்ளது. நடிகர் அக்ஷய் குமார் வெளிநாட்டவராக இருந்தால் அவரை கைது செய்து இந்தியாவில் இருந்து வெளியேற்றும்படி கேட்டிருப்போம்'' என கூறியுள்ளார். இதன்மூலம் விரைவில் வழக்கு தொடரப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.

தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு
தமிழகத்தில் ராமேஸ்வரம் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் நிலையில் புராணங்கள் அடிப்படையில் இது ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டிய ராமர் பாலம் என்ற கருத்தும் உள்ளது. முன்னதாக இந்த பகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அரசு சார்பில் 2007ல், சேதுசமுத்திர திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்த நிலையில் திட்டம் தடைப்பட்டது. மேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க உத்தரவிடவேண்டும் என சுப்பிரமணியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .
-
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications