மத்திய அரசு மட்டுமல்ல.. மாநிலங்களும் தனியார் துறைக்கு ஊக்கம் கொடுப்பது ரொம்ப அவசியம்.. மோடி பேச்சு
டெல்லி: இந்தியா சுயசார்பு அடைய வேண்டுமென்றால் தனியார் துறைக்கு ஊக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி இவ்வாறு பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆறாவது நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநில முதல்வர்களுடனும், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பிரதமர் பேசுகையில் கூறியதாவது: சுயசார்பு, இந்தியா தற்சார்பு இந்தியா என்ற கோஷங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம் இது உண்மையிலேயே நனவாக வேண்டும் என்றால் தனியார் துறைக்கு அரசு போதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். தனியார் துறை வளர மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.
கொரோனா நோய் பரவல் காலகட்டத்தின் போது மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செயலாற்றியது. இதன் மூலமாக நாம் நோய் பரவலை கட்டுப்படுத்தி உலகம் முழுக்க நல்ல மதிப்பைப் பெற்று உள்ளோம். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் இந்தியாவின் அடிப்படை. மாநிலங்களுக்கு இடையே மட்டும் கிடையாது. மாவட்டங்களிலும் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கவில்லை.
மாநிலங்களுக்கு போதிய நிதி அதிகாரம் இல்லை.. மத்திய அரசு பறித்து விட்டது என்பதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என்று மமதா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அமரீந்தர் சிங், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
மத்திய அரசு இரண்டு தொழிலதிபர்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது, மக்களிடம் போடப்படும் வரி நண்பர்களுக்கு செல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தனியார் மற்றும் தனியார் துறைக்கு அதிக ஒத்துழைப்பு வழங்குவது அரசின் கடமை என்று மோடி கூறியுள்ளது முக்கியத்துவம் அளிக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications