18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கேன்.. இப்படியொரு அதிகாரம் இருப்பதே தெரியாது.. நீதிபதி மன்மோகன் கருத்து
டெல்லி: ஏடிஜிபி ஜெயராமன் தொடர் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன், 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். இப்படி உடனடியாக கைது செய்ய உத்தரவிடும் இத்தகைய அதிகாரம் இருப்பது எனக்கே தெரியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த பெண் விஜயஸ்ரீ இருவரும் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் தங்களின் பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பெண்ணின் குடும்பத்தினர் இளைஞர் தனுஷின் சகோதரரை கடத்தினர்.

இதன்பின் சில மணி நேரங்களிலேயே சிறுவனை விட்டுவிட்டு சென்றனர். இதில் கடத்தலுக்கு பயன்படுத்தியது ஏடிஜிபி ஜெயராமனின் அரசு வாகனம் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிக்க முயற்சித்தனர். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.
அப்போது ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜரான நிலையில், உடனடியாக அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் பூவை ஜெகன் மூர்த்தியை விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தியது. தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமன் திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு சுமார் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இதன்பின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கைது நடவடிக்கையை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராமன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதிகள், சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியது.
தொடர்ந்து சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசின் ஆலோசனை பெற்று நாளை பதில் அளிக்க உத்தரவிட்டது. இதனிடையே நீதிபதி மன்மோகன், 18 ஆண்டுகளாக நானும் நீதிபதியாகவே இருக்கிறேன். கைது செய்ய உத்தரவிடும் இத்தகைய அதிகாரம் இருப்பது எனக்கே தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications