வறுக்கும் வாணலியில் இருந்து நெருப்பிற்கு செல்லும் தமிழகம்... பதிவிட்ட கட்ஜூவுக்கு முகநூலில் பதிலடி
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தேர்தல் முடிவுகள் பற்றி முகநூலில் பதிவிட்டுள்ளார். வறுக்கும் வாணலியில் இருந்து நெருப்பிற்கு தமிழகம் செல்கிறது ஹரி ஓம் என்று பதிவிட்டுள்ளார் கட்ஜூ. இவரது பதிவிற்கு முகநூலில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்வார். சமீபத்தில் பெரியார் பற்றி பதிவிட்டது விமர்சனத்திற்கு ஆளானது.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பற்றி தனது முகநூலில் எழுதியுள்ள சில பதிவுகள் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நேர்மையின் எல்லை இதுதான் என்று பதிவிட்டுள்ளார் கட்ஜூ. தொடர்ந்து அவர் தனது மற்றொரு பதிவில், ஒவ்வொரு அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் செயற்பாடுகளின் சோதனை ஒன்று, மற்றொன்று தான். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குகிறதா? அந்த பார்வையிலிருந்து 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் ஒரு யூனியன் பிரதேசமும்முற்றிலும் தொடர்பில்லாதவை என்று பதிவிட்டுள்ளார்.
இவர்கள் எப்படி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவார்கள் அல்லது அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை தருவார்கள்? அவர்கள் எந்த விதத்திலும் செய்வதில்லை. வறுமை, வேலைவாய்ப்பின்மை, குழந்தைத் தளர்ச்சி, விவசாயிகளின் துயரம், சரியான சுகாதாரமின்மை, பொது மக்களுக்கு நல்ல கல்வி, விலைவாசி உயர்வு, ஊழல், போன்றவை முன்பு போலவே தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார்.

வறுக்கும் வாணலியில் இருந்து நெருப்பிற்கு தமிழகம் செல்கிறது ஹரி ஓம் என்று கிண்டல் பதிவை போட்டிருக்கிறார். இவரது பதிவுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நெருப்பு விரைவில் பேய்களை அளிக்கும் என்று கூறியுள்ளார் ஒரு பதிவர்.
நன்றி, நாங்கள் எண்ணெய் வறுவலுக்கு பதிலாக தந்தூரியை விரும்புகிறோம். ஆரோக்கியத்திற்கு நல்லது. சுகாதார உணர்வில் தமிழ்நாட்டிற்கான மற்றொரு சான்று முன்னால் உள்ளது என்றும் கருத்திட்டுள்ளார் மற்றொரு முகநூல் பதிவர்.












Click it and Unblock the Notifications