தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் 7ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
டெல்லி: தொழில் நிறுவனங்கள் 2021-2022-ம் ஆண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கொடு நேற்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமானவரி இணையதளத்தில் பல பிரச்சனைகள் எழுந்தன. இதன் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க சார்ட்டட் அக்கவுண்டன்ட்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி, தொழில் நிறுவனங்கள் 2021-2022-ம் ஆண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள், தங்கள் கணக்கை சார்ட்டட் அக்கவுண்டன்ட் மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த தணிக்கை பிரிவு 44பி-ன் கீழ் நடைபெறுகிறது.

2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நேரடி வரிகள் வாரியம் கூறியிருந்தது. தணிக்கை அறிக்கையை காலக்கெடுவுக்குள் உருவாக்காவிட்டால், அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 271பி-ன் படி, தாமதத்திற்கு மொத்த விற்பனை, வருவாய் அல்லது மொத்த வணிக ரசீதுகளில் 0.5 % அல்லது ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். கடைசி தேதியான நேற்று மாலை மத்திய நேரடி வரிகள் வாரியம், ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் மற்றும் பிறர் பிரச்சனைகளை எதிர்கொண்டதை கவனத்தில் ஏற்று, 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, வரும் 7-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் இந்த முடிவுக்கு, வருமான வரித்துறைக்கு, சார்ட்டட் அக்கவுண்டன்ட்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications