கருப்பு பூஞ்சை நோயை.. பெருந்தொற்று நோயாக அறிவித்தது மத்திய அரசு.. சிகிச்சைக்கான மருந்தும் அறிவிப்பு!
டெல்லி: கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று நோயாக அறிவித்த மத்திய அரசு, இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து அச்சறுத்தி உயிரை பறித்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.
பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

கருப்பு பூஞ்சை நோய்
பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பிறகு கருப்பு பூஞ்சை தொற்றால் அதிகம் பேர் இருந்து வருகின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. முகராமைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண் ,மூக்கு, சுற்றுப்பாதையை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கண் பலவீனமடையும் என்றும் நுரையீரலையும் பாதிக்கும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட நோய்
இதனால் பல்வேறு மாநிலங்கள் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. தொடர்ந்து அச்சறுத்தி வருவதால் இந்தியாவில் முதல் முறையாக, கருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது அதன்பின்பு ராஜஸ்தான், தெலுங்கானா, ஹரியானா மாநில அரசுகள் இந்த நோயை அறிவிக்கப்பட்ட நோய் பட்டியலில் சேர்த்தது.

சுகாதாரத்துறை கடிதம்
தமிழக அரசும் கருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக இன்று பட்டியவிட்டுள்ளது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயை கொள்ளை நோயாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சிகிச்சைக்கு என்ன மருந்து?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ENT மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்களை பயன்படுத்தலாம் . கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று நோய் பட்டியலில் சேர்க்கலாம். Amphotericin B மருந்தினை இந்த நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இந்த நோய் தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications