'பார்த்து கவனமா பேசுங்க'.. சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம். ஏன் தெரியுமா
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமெடுத்தபோது தமிழகம், கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து கொண்டிருந்தது.
கொரோனா தொற்றை கவனத்தில் கொள்ளாமல் அரசியல் கட்சியினர் கூட்டம் சேர்ப்பதால் கொரோனா மேலும் அதிகரிக்கும் என்று பலரும் குற்றம்சாட்டினார்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்பு
இதனை தொடர்ந்து தமிழக தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் இது தொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது கூறிய நீதிபதிகள், '' கொரோனா தடுப்பு விதிகளை புறந்தள்ளி கூட்டம், கூட்டமாக மக்கள் பிரசாரத்துக்கு திரண்டனர். அரசியல் கட்சியினர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் மக்கள் கூட்டத்தை சேர்த்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கொலைகுற்றம் சுமத்தலாம்
தமிழகத்தில் கொரோனா பரவியதற்கு தேர்தல் ஆணையம்தான் காரணம். இதற்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் கூட சுமத்தலாம் என்று நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். நீதிபதிகளின் இந்த கருத்து பல்வேறு ஊடகங்கள், பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வலம் வந்தது. உயர்நீதிமன்றம் முன்பே ஏன் இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை? என்று ஒரு தரப்பினரும் தேர்தல் ஆணையம் மீதுதான் அனைதது தவறும் உள்ளது என்று வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

கடுமையான கருத்து
இதனை தொடர்ந்து ' தேர்தல் ஆணையம் மீது கொலைகுற்றம் கூட சுமத்தலாம்' என்ற வார்த்தையை ஊடகங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் சந்திரசூட், எம் ஆர் ஷா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தலாம்'' என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து மிகவும் கடுமையானது'' என்று தெரிவித்தனர்.

கவனம் வேண்டும்
'சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். நீதிமன்ற விவகாரங்களை செய்தியாக வெளியிடக்கூடாது என்று ஊடகங்களை வற்புறுத்த முடியாது. அது அவர்களின் கடமை. எனவே நீதிபதிகள் கருத்துக்களை தெரிவிக்கும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்'' என்று கூறிய நீதிபதிகள் தேர்தல் ஆணையம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications