'தலைமுறை சீரமைப்புக்கு உங்கள் பங்களிப்பு அளப்பரியது'.. இந்திய மணல் சிற்ப கலைஞரை பாராட்டிய ஐ.நா!
டெல்லி: சுதர்சன் பட்நாயக். இந்த பெயரை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம். கல்லிலே கலைவண்ணம் படைக்கும் கலைஞர்கள் நமது நாட்டில் அனைத்து பகுதிகளிலும் ஏராளமானோர் நிரம்பி கிடக்கின்றனர்.
ஆனால் மண்ணிலே கலை வண்ணம் படைப்பவர்தான் இந்த சுதர்சன் பட்நாயக். இந்தியாவின் மிகச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்

மணல் சிற்ப கலைஞர்
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பிறந்த சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையை சுதர்சன் பட்நாயக் கடற்கரை என்று சொல்லும் அளவுக்கு மாற்றி விட்டார் என்று சொன்னால் அது மிகையல்ல. நாட்டில் எந்தவொரு விசேஷ நாட்களிலும், சோக நாட்களிலும் சுதர்சன் பட்நாயக் கைவண்ணம் மிளிரும்.

விழிப்புணர்வு நாயகன்
குறிப்பாக புகையிலை எதிர்ப்பு தினம், புற்றுநோய் விழிப்புணர்வு தினம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை தனது மணல் சிற்பம் மூலம் வெளிப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் சுதர்சன் பட்நாயக். தத்ரூபமாக இருக்கும் இவரின் பிரமாண்ட மணல் சிற்பத்தை கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாயது.

சாதனைகளுக்கு சொந்தக்காரர்
மணல் சிற்பத்துக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்று இருக்கிறார் சுதர்சன் பட்நாயக். இது தவிர மணல் சிற்பத்தில் கின்னஸ் சாதனை, லிம்கா சாதனை என பல்வேறு சாதனை, விருதுகளை தன்வசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு செய்யும் விதமாக பிரமாண்டமான மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கி இருந்தார்.

பிரமாண்டமான மணல் சிற்பம்
சுமார் ஏழு டன் மணலை கொண்டு 8 அடி அகலம், 13 அடி உயரத்தில் உருவாக்கபட்ட அந்த மணல் சிற்பம் சுற்றுச்சூழலின் அவசியத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்தது. நேற்று பல்வேறு ஊடங்களில் இந்த மணல் சிற்பம் இடம் பிடித்தது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) சுதர்சன் பட்நாயக்கை வெகுவாக பாராட்டியுள்ளது.

ஐ.நா பாராட்டு
இது தொடர்பாக யுஎன்இபி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவில், ' தலைமுறை சீரமைப்புக்காக இந்த அழகான பங்களிப்புக்கு சர்வதேச மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு நன்றி' என்று அந்த மணல் சிற்பம் படத்தையும் இணைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து பாராட்டு பெறுவது தனக்கு கிடைத்த மரியாதை என்று பட்நாயக் மகிழ்ச்சி ததும்ப கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications