Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரவும் புதிய "ஓமிக்ரான் XE!" குழந்தைகள் இடையே உயரும் கொரோனா.. அச்சப்பட வேண்டுமா? ஆய்வாளர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பள்ளிகளில் கொரோனா கண்டறியப்படுவது அதிகரித்து உள்ள நிலையில், இது தொடர்பாக மருத்துவர் டாக்டர் ககன்தீப் காங் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த 2019 இறுதி முதலே உலகின் பல்வேறு நாடுகளையும் மோசமாகப் பாதித்தது கொரோனா பெருந்தொற்று தான். அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எந்தவொரு உலக நாடும் இந்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பவில்லை

கொரோனா வேக்சின் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை காரணமாக வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக மெல்லக் குறைந்து வருகிறது. உலக நாடுகள் மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

 ஓமிக்ரான் XE

ஓமிக்ரான் XE

இந்தச் சூழலில் உலகின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதிலும் புதிய ஓமிக்ரான் XE வகையும் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்குவது அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தையும் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. இருப்பினும், கடந்த வாரத்தின் வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடும் போது பல முக்கிய நகரங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

 என்ன காரணம்

என்ன காரணம்

குறிப்பாக சமீப நாட்களாக டெல்லி பள்ளிகளில் குழந்தைகளிடையே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து நாட்டின் உயர்மட்ட உயிரியல் டாக்டர் ககன்தீப் காங் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை நடத்தாத வரை வைரஸ் பாதிப்பு இப்போது அதிகரிக்க XE வகை கொரோனா காரணமாக உள்ளதா என்பது குறித்து உறுதியாகத் தெரியாது.

 புதிய XE பிறழ்வு

புதிய XE பிறழ்வு

வைரஸ் பாதிப்பு குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டால் மட்டுமே தெளிவாக என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இப்போது இருக்கும் தரவுகளைக் கொண்டு நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது. இந்த புதிய XE பிறழ்வு ஓமிக்ரான் கொரோனாவின் ஒரு வகை என்பது மட்டுமே இப்போது நமக்குத் தெரியும். ஓமிக்ரான் கொரோனா மற்ற வகைகளைப் போல இல்லாமல் கீழ் சுவாசக் குழாயை விட மேல் சுவாசக் குழாயில் அதிகமாகப் பரவுகிறது.

 லேசான பாதிப்பு

லேசான பாதிப்பு

எனவே, இந்த ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்குக் காய்ச்சல், அமைதியின்மை ஏற்படும். பொதுவாக மக்களிடையே லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது. அதேநேரம் அறிகுறிகளை மட்டுமே வைத்து ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதைச் சொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். பரவும் உருமாறிய கொரோனா குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் போதிலும், மரபணு வரிசைப்படுத்தல் குறித்த தரவுகள் இல்லையென்றால், எந்த வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்ல முடியாது.

 மீண்டும் பாதிப்பு

மீண்டும் பாதிப்பு

இப்போது கொரோனா கேஸ்கள் சற்றே அதிகரித்து இருந்தாலும் கூட, இதை நான்காம் அலையின் தொடக்கம் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள், வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் ஆகியிருக்கும் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படும். மற்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், ஒப்பீட்டளவில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பும் கொரோனா வேக்சின் பணிகளும் ஹைபிரிட் தடுப்பாற்றலை அளித்துள்ளது.

 தடுப்பாற்றல்

தடுப்பாற்றல்

அதேநேரம் இந்த தடுப்பாற்றல் போதுமானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஓமிக்ரான் கொரோனா இதற்கான சாட்சி. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. இருப்பினும் இது குறித்துப் பெற்றோர்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

 குழந்தைகள்

குழந்தைகள்

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குழந்தைகள் மத்தியில் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே தெரிகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கூட ஏற்கனவே 80% குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் குழந்தைகள் விதிவிலக்கு இல்லை.

 அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

எனவே, எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் பெரும்பாலான கொரோனா கேஸ்கள் லேசானதாகவே உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவிகள் கூட தேவைப்படுவதில்லை. இந்தியாவில் நம்மிடம் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, மிகக் குறைவான குழந்தைகளுக்கு.. அதுவும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படுகிறது. எனவே, இதைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+