வாகன பெர்மிட், டிரைவிங் லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் கவலைப்படாதீங்க.. காலக்கெடு நீட்டிப்பு
டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி முதல் காலாவதி ஆகக்கூடிய, டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பெர்மிட், வாகனப் பதிவு ஆகியவற்றுக்கான காலக்கெடு தேதியை ஜூன் 30ம் தேதியாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா அச்சத்தால் ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மக்களால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வெளியே செல்ல முடிவதில்லை. எனவே, பிப்ரவரி 1ம் தேதி முதல் காலாவதியான, வாகனம் மற்றும் ஓட்டுநர் தொடர்பான ஆவணங்களின் காலாவதி காலம் ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அத்தனை மாநிலங்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளது, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை.
அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதால் ஆவணங்களை புதுப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் குடிமக்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த லாக்டவுன் அமலான நிலையில் மாநிலங்கள் தங்கள் எல்லைகளை சீல் வைத்ததால், சரக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத போக்குவரத்தை உறுதி செய்வதற்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications