வழக்கம் போல மத்திய அரசு வஞ்சகம்- உ.பி.க்கு ரூ25,495 கோடி; தமிழகத்துக்கு ரூ5,797 கோடி வரிப் பகிர்வு!
டெல்லி: நாட்டின் மாநிலங்களுக்கு ரூ1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு வழங்கியுள்ளது. இதில் மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் ரூ25,495 கோடி வரிப் பகிர்வைப் பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு ரூ5,797 கோடி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 3-வது தவணையாக வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்கி உள்ளது. மொத்தம் ரூ.1.42 லட்சம் கோடி வரிப் பகிர்வை மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது மத்திய அரசு. நாட்டிலேயே மிக அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலம் ரூ25,495 கோடி வரிப் பகிர்வைப் பெற்றிருக்கிறது.

மாநிலங்களுக்கான மத்திய அரசின் 3-வது தவணை வரிப் பகிர்வு விவரம்:
1, ஆந்திரா - ரூ5752 கோடி
2. அருணாச்சல பிரதேசம்- ரூ 2497 கோடி
3. அஸ்ஸாம் - ரூ4446 கோடி
4. பீகார் - ரூ14295 கோடி
5. சத்தீஸ்கர்- ரூ4842 கோடி
6. கோவா - ரூ 549 கோடி
7. குஜராத் - ரூ4943 கோடி
8. ஹரியானா - ரு1553 கோடி
9. இமாச்சல பிரதேசம்- ரூ1180 கோடி
10. ஜார்க்கண்ட் ரூ4700 கோடி
11. கர்நாடகா - ரூ5183 கோடி
12. கேரளா- ரூ2736 கோடி
13. ம.பி.- ரூ11157 கோடி
14. மகாராஷ்டிரா- ரூ8978 கோடி
15. மணிப்பூர்- ரூ1018 கோடி
16. மேகாலயா- ரூ 1090 கோடி
17. மிசோரம் ரூ 711 கோடி
18. நாகாலாந்து- ரூ 809கோடி
19. ஒடிஷா- ரூ6435 கோடி
20. பஞ்சாப்- ரூ2568 கோடி
21. ராஜஸ்தான் - ரூ 8564கோடி
22. சிக்கிம்- ரூ 551 கோடி
23. தமிழ்நாடு- ரூ5797 கோடி
24. தெலுங்கானா- ரூ2987 கோடி
25. திரிபுரா- ரூ1006 கோடி
26. உ.பி.- ரூ 25495 கோடி
27. உத்தரகாண்ட்- ரூ 1589 கோடி
28. மேற்கு வங்கம்- ரூ 10692 கோடி

மொத்தன் ரூ1,42,122 கோடி.
தென்னிந்திய மாநிலங்களுக்கான மொத்த நிதி பகிர்வு: ரூ22,455 கோடி.
தமிழ்நாடு - ரு5797 கோடி
ஆந்திரா- ரூ 5752 கோடி
தெலுங்கானா- ரூ2987 கோடி
கேரளா- ரூ2736 கோடி
கர்நாடகா- ரூ 5183 கோடி
ஆனால் உத்தரப்பிரதேசம் எனும் ஒரே ஒரு மாநிலத்துக்கு மட்டும் ஒட்டுமொத்த 5 தென்னிந்திய மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விட மிக அதிகமாக ரூ 25,495 கோடி வழங்கி உள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.












Click it and Unblock the Notifications