திரைப்படங்கள் குறித்த தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்.. பாஜகவினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல்
டெல்லி: திரைப்படங்கள் குறித்து சிலர் கருத்து கூறுகின்றனர். இது தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாள் முழுவதும் ஓடுகிறது. எனவே திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என பாஜகவினருக்கு பிரதர் மோடி செயற்குழு கூட்டத்தில் அறிவுறுத்தல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் ஜனவரி 16, 17-ந்தேதிகளில் நடைபெறும் என்று அந்தக்கட்சி அறிவித்தது.
அதன்படி பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்றும், நேற்று முன் தினமும் நடைபெற்றது. குஜராத்தில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிறகு நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.

தேசிய செயற்குழு கூட்டம்
டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 35 மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள் 37 மாநில பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

பாஜக வெறும் அரசியல் இயக்கம் அல்ல
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவின் மிகச்சிறந்த சகாப்தம் இனிதான் வர உள்ளது. அதன் வளர்ச்சிக்கு நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். கிராமங்களில் குறிப்பாக எல்லையோர கிராமங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த்தி நாம் அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அவர்களை சென்றடைய வைக்க வேண்டும். பாஜக வெறும் அரசியல் இயக்கம் அல்ல. அது ஒரு சமூக இயக்கம்" என்று பேசினார்.

தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும்
மேலும், திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ''சில திரைப்படங்கள் குறித்து சிலர் கருத்து கூறுகின்றனர். இது தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாள் முழுவதும் ஓடுகிறது. எனவே திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தி சொன்னதாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோனேவின் காவி உடை
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சி ஒன்றில் தீபிகா படுகோனே அணிந்து இருந்த காவி உடை குறித்து சர்ச்சை கிளம்பியது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சில பாஜக நிர்வாகிகள் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications