விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்.. முன்னாள் சிஏஜி உள்பட 4 அதிகாரிகள் வழக்கு தொடர அனுமதி கோரும் சிபிஐ
டெல்லி: ரூ .3,600 கோடி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சசி காந்த் சர்மா மீது வழக்குத் தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சசி காந்த் சர்மா முன்னாள் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி) ஆகவும் இருந்தவர் ஆவார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய பிரமுகா்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, ஹெலிகாப்டா் கொள்முதல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் மீது அமலாக்கத் துறையினா் வழக்கு பதிவு செய்தனா். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவா், டெல்லியில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த ஊழலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சசி காந்த் சர்மா மீது வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது. அத்துடன் ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் விவாதிக்கப்படும்போது முக்கிய முடிவெடுக்கும் பதவிகளை வகித்த சில முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் மீதும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதன் துணை குற்றப்பத்திரிகையில் பெயர்களை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சசி காந்த் சர்மா மற்றும் அப்போதைய ஏர் வைஸ் மார்ஷல் ஜஸ்பீர் சிங் பனேசர் ஆகியோர் மீது வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
சிஏஜியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2011 மற்றும் 2013 க்கு இடையில் சசி காந்த் சர்மா பாதுகாப்பு செயலாளராக இருந்தார். . இவர் மட்டுமின்றி மூன்று முன்னாள் இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) அதிகாரிகள் ஆகியார் மீது வழக்கு தொடர பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications