விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்.. முன்னாள் சிஏஜி உள்பட 4 அதிகாரிகள் வழக்கு தொடர அனுமதி கோரும் சிபிஐ
டெல்லி: ரூ .3,600 கோடி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சசி காந்த் சர்மா மீது வழக்குத் தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சசி காந்த் சர்மா முன்னாள் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி) ஆகவும் இருந்தவர் ஆவார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய பிரமுகா்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, ஹெலிகாப்டா் கொள்முதல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் மீது அமலாக்கத் துறையினா் வழக்கு பதிவு செய்தனா். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவா், டெல்லியில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த ஊழலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சசி காந்த் சர்மா மீது வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது. அத்துடன் ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் விவாதிக்கப்படும்போது முக்கிய முடிவெடுக்கும் பதவிகளை வகித்த சில முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் மீதும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதன் துணை குற்றப்பத்திரிகையில் பெயர்களை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சசி காந்த் சர்மா மற்றும் அப்போதைய ஏர் வைஸ் மார்ஷல் ஜஸ்பீர் சிங் பனேசர் ஆகியோர் மீது வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
சிஏஜியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2011 மற்றும் 2013 க்கு இடையில் சசி காந்த் சர்மா பாதுகாப்பு செயலாளராக இருந்தார். . இவர் மட்டுமின்றி மூன்று முன்னாள் இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) அதிகாரிகள் ஆகியார் மீது வழக்கு தொடர பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications