தமிழக ஆளுநர் ரவி குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் நோட்டீஸ் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.!
டெல்லி: தமிழக ஆளுநர் ரவி குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் அவசரம் முக்கியத்துவம் வாய்ந்த நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அதில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளால் மாநில அரசின் நிர்வாகம் ஸ்தம்பிக்க செய்வதாகவும் 22க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கையில் எடுத்திருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆளுநரின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கக் கோரி மக்களவையில் நோட்டீஸ் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.

சரமாரி குற்றச்சாட்டு
அவர் அளித்துள்ள நோட்டீஸில், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க சபை முன்வர வேண்டும் என்றும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டியவர் மாநில அரசால் இயற்றப்பட்ட 22 க்கும் மேற்பட்ட மசோதாக்களை எந்த ஒப்புதலும் இல்லாமல் கிடப்பில் வைத்திருக்கிறார் எனவும் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநரின் பொறுப்புகள் என்ன என்பது பற்றி விவாதிக்க சபை முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒப்புதல் தருவதில்லை
மாநில அரசால் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மற்றும் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2022 போன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசின் நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக உறுப்பினர்கள்
ஆளுநர் ரவிக்கு எதிரான இந்த விவகாரத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கையில் எடுத்திருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications