ஹத்ராஸ்.. செய்தி சேகரிக்கவிடாமல் நிருபர்களை தடுப்பது ஏன்? டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் கேள்வி
டெல்லி: ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் குறித்து செய்தி வெளியிட விடாமல் தடுப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம் அதிர்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் எஸ்.கே.பாண்டே, பொதுச் செயலாளர் சுஜாதா மதோக், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரின் குடும்பத்தினர் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களைச் சந்திக்க யாரும் கிராமத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கேமரா குழுவினரும் நிருபர்களும் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்துள்ளனர்.
எம்.பி.க்கள் டெரெக் ஓ 'பிரையன் மற்றும் ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் பிற தலைவர்கள் கிராமத்திற்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினரால் கடுமையாக இடைமறிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் ஹத்ராஸுக்கு நடந்து செல்ல முயன்றபோது தரையில் தள்ளப்பட்டார். பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்துள்ளனர்.
தடயவியல் அறிக்கை, பலாத்காரம் நடக்கவில்லை என கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நள்ளிரவு அவசரமாக தகனம் செய்யப்பட்டுள்ளதால் சந்தேகங்களை தீர்க்க இரண்டாவது பிரேத பரிசோதனை செய்ய எஞ்சியிருந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முழு வழக்கையும் உ.பி. அரசு தவறாகக் கையாள்வது குறித்து கேள்விகளை எழுப்புவோருக்கு எதிராக தணிக்கை செய்வது குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசாங்கம் எதை மறைக்க விரும்புகிறது, யாரைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து கேள்விகள் எழத்தான் செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications