தமிழ்நாட்டுக்கு எதியூரப்பா ஆளுநராக வாய்ப்பே இல்லை.. இந்த இரண்டில் ஒன்றுக்கு சான்ஸ்!
டெல்லி: கர்நாடக முதல்வராக இருந்து வரும் எதியூரப்பா ஒரு வழியாக ராஜினாமா செய்யும் மனதுக்கு வந்து விட்டார். அவர் பதவி விலகிய பிறகு ஆளுநர் பதவி தரப்படும் என்று வலுவாக பேசப்படுகிறது.
ஆளுநர் பதவிக்கு எதியூரப்பா அமர்த்தப்படுவார் என்று அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மேலிடமும் கூட, எதியூரப்பாவுக்கு கெளரவமான பொறுப்பு அளிக்கப்படும் என்று அவரிடமே உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தின் மிக மூத்த அரசியல்வாதியான எதியூரப்பா தீவிர அரசியலை விட்டு எப்படி விலகி இருக்கப் போகிறார் என்பதும் இன்னொரு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

பாஜகவின் உயிர் நாடி
கர்நாடக பாஜகவைப் பொறுத்தவரை எதியூரப்பாவைப் பிரித்துப் பார்ப்பது என்பது ரத்தத்தையும்,உடலையும் பிரித்துப் பார்ப்பதற்கு சமம். அந்த அளவுக்கு கர்நாடக பாஜகவின் உயிர் நாடியாக திகழ்பவர் எதியூரப்பா. அந்த அளவுக்கு தனது உழைப்பைக் கொட்டி கட்சியை வலுவாக்கியவர். ஆரம்ப கால பாஜகவின் நிலை கர்நாடகம் நன்கறியும். அதை ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றியவர் நிச்சயம் எதியூரப்பாதான். சந்தேகமே தேவையில்லை.

சாமி சும்மா சொல்லலை
எதியூரப்பா இல்லாமல் கர்நாடக பாஜக இல்லை என்று சுப்பிரமணியம் சாமி சும்மா சொல்லவில்லை. எதியூரப்பாவின் உழைப்புதான் கர்நாடகாவில் இன்று பாஜக வலுவாக காலூன்றி இருக்க முக்கியக் காரணமே. கர்நாடகத்தின் முதல் பாஜக அரசுக்குத் தலைமை தாங்கிய எதியூரப்பா, இன்று வரை அசைக்க முடியாத முதல்வராக கோலோச்சி வருகிறார்.

ஆதிக்கம் தகருகிறது
கர்நாடக பாஜகவில் எதியூரப்பாவின் ஆதிக்கம் எப்போதும் போல வலுவாகவே இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. அதேசமயம், எதியூரப்பாவுக்கு எதிரான சக்திகள் ஒருங்கிணைந்து நிற்பதையும் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது. எதியூரப்பா விலக வேண்டிய தருணம் வந்து விட்டது. இன்று இல்லாவிட்டாலும் அவர் நாளை விலகித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு ஒரு சூழல் உருவாகி விட்டது.

ஆளுநராகும் வாய்ப்பு
எதியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஆளுநர் பதவி அவருக்குத் தரப்படும் என்று தெரிகிறது. அவர் தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று ரொம்ப நாட்களாக கூறப்படுகிறது. ஆனால் கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக காவிரிப் பிரச்சினை. மேகதாது அணை விவகாரம் சூடாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக எதியூரப்பாவே பிரியப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாடு ஆளுநர் ஆவாரா
மேலும் தமிழ்நாட்டில் தற்போது இருப்பது திமுக ஆட்சி. மறைந்த தலைவர் கருணாநிதிக்கும், எதியூரப்பாவுக்கும் இடையிலான நட்பு அனைவரும் அறிந்ததுதான். கருணாநிதியும், எதியூரப்பாவும் இணைந்துதான் பெங்களூர் திருவள்ளுவர் சிலை விவகாரத்திற்கு சுமூக தீர்வு கண்டனர். நீண்ட காலமாக பெங்களூரில் பெரும் தலைவலியாக இருந்து வந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களின் அன்பைப் பெற்றவர் எதியூரப்பா.

கருணாநிதியுடனான நட்பு
இப்படிப்பட்ட நிலையில், கருணாநிதியின் மகன் ஆட்சி புரியும் இந்த வேளையில் இங்கு ஆளுநராக வர எதியூரப்பா விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். ஒரு ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கண் பார்வைப்படி செயல்பட வேண்டியவர். அப்படி இருக்கும்போது ஸ்டாலினுடன் பிணக்கு வரும் வகையில் தன்னால் செயல்பட முடியாது என்று எதியூரப்பா கருதுகிறாராம். எனவே தமிழ்நாட்டு ஆளுநராக அவர் வர வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.

தெலங்கானா
ஆந்திரா அல்லது தெலுங்கானாவின் ஆளுநராக எதியூரப்பா நியமிக்கப்படலாம் என்று வலுவாக நம்பப்படுகிறது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. தற்போது தெலங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை செளந்தரராஜன். ஒரு வேளை அவர் மாற்றப்பட்டால் அவருக்கு எந்த மாநிலத்தில் பதவி கொடுக்கப்படும் அல்லது அவர் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவாரா என்று துணைக் கேள்விகளும் எழுகின்றன.
பொருத்திருந்து பார்ப்போம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications