ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்பாக ஒருவர் இருந்தால் அது பேரழிவு! யஷ்வந்த் சின்ஹா பரபர பேட்டி
டெல்லி: ‛‛ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்ப் ஆக ஒருவர் இருந்தால் அது பேரழிவை தரும். இந்த பதவிக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் நபரை விட திறமையான நபர் வேண்டும். நான் ஒருபோதும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கமாட்டேன்'' என எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம்(ஜூலை) 18 ம் தேதி நடைபெற உள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அமைச்சர், ஆளுநராக இருந்த அனுபவம் கொண்டவர்.

யஷ்வவந்த் சின்ஹா போட்டி
திரெளபதி முர்முவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தார். தற்போது இவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எதேச்சதிகார கொள்கைக்கு எதிர்ப்ப
தற்போது நடைபெறும் தேர்தலை வெறும் இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலாக கருத வேண்டாம். ஏனென்றால் இந்த தேர்தல் அதைவிட மேலானது. இந்தத் தேர்தல் அரசின் எதேச்சதிகார கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒரு படியாகும். இந்த கொள்கைகளுக்கு எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதை நிரூபிக்க வேண்டிய தேர்தல்.

ஒட்டுமொத்த சமுகத்தையும் உயர்த்தாது
எனது அனுபவத்தின் அடிப்படையில் நான் ஒன்றை கூற முடியும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த நபரின் உயர்வு என்பது அவர் சார்ந்த் ஒட்டுமொத்த சமுகத்தையும் உயர்த்தாது. ஒட்டுமொத்த சமுகத்தின் உயர்வு என்பது அரசு பின்பற்றும் கொள்கைகளை பொறுத்து தான் இருக்கும். பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக நிறுத்தி இருப்பது என்பது ஒரு அரசியல் செயல் தான்.

ஜனநாயக அச்சுறுத்தல்
தற்போது நமது ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்தியாவை காக்க அனைவரும் எழுந்து வர வேண்டும்.

ரப்பர் ஸ்டாம் நபர் வேண்டாம்
நமது நாட்டின் அரசியல் இன்று பல பலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீதிக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு நிலை வரக்கூடாது. ராஷ்டிரபதி பவனுக்கு(ஜனாதிபதி மாளிகை) ரப்பர் ஸ்டாம்பாக இருப்பவரை விட திறமையான நபர் வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற ஜனாதிபதிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே ராஷ்டிரபதி பவனுக்கு இன்னொரு முறை ரப்பர் ஸ்டாம்ப் நபர் இருந்தால் அது ஒரு பேரழிவாக இருக்கும்'' என்றார்.

மகன் ஆதரவு இல்லையே என கேள்வி
மேலும், யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா பாஜகவின் எம்பியாக உள்ளார். இந்நிலையில் மகன் ஆதரவு வழங்காதது பற்றி யஷ்வந்த் சின்ஹாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு யஷ்வந்த் சின்ஹா, ‛‛இந்த விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தர்மசங்கடம் எதுவும் நேரவில்லை. அவர் தனது ‛ராஜ் தர்மத்தை' பின்பற்றுகிறார். நான் எனது 'ராஷ்டிர தர்மத்தை' பின்பற்றுவேன்'' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications