நீட் தேர்வுக்கு படிக்க செல்போன் கொடுத்த தந்தை.. ஆன்லைன் கேமில் பணத்தை இழந்து தற்கொலை செய்த மகன்
தருமபுரி: நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 20).
பிளஸ் 2 படித்துள்ள இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் மூன்று வருடங்களாக நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார்.

ஆன்லைன் கேமுக்கு அடிமை
ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிகளுக்காக வெங்கடேஷுக்கு அவருடைய தந்தை செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த செல்போனில் தொடக்கத்தில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வு சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றை தீவிரமாக படித்து வந்த வெங்கடேஷ் நாட்கள் செல்ல செல்ல ஸ்மார்ட் போன் கேம்களை விளையாடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளார்.
Recommended Video

ரூ.50 ஆயிரம் இழப்பு
நாளடைவில் இந்த ஆர்வம் அதிகமாகவே ஆன்லைனில் பணம் கட்டி கேம்களை விளையாட ஆரம்பித்து இருக்கிறார் அவர். தொடர்ந்து விளையாடியதில் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் இழந்துள்ளார். ஆன்லைன் கேமுக்கு அடிமையாகிப்போன வெங்கடேஷ் பணம் இல்லாததால் வீட்டிலிருந்த நகையை தனியார் நகை அடகு கடையில் அடகு வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார். அப்போது கடனாக பெற்ற ரூ.50 ஆயிரம் ரூபாயை வெங்கடேஷ் இழந்துள்ளார்.

தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ் கடும் மன உளைச்சலில் கடந்த 7ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை அடுத்து அவரை பெற்றோர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களாக வெங்கடேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

தடை நீக்கம்
ஆன்லைன் ரம்மி போன்ற கேம்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதன் காரணமாக மீண்டும் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் அதிகளவில் ஆன்லைன் கேம்கள், சூதாட்டங்களில் ஈடுபட்டு பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு ஆன்லைன் கேம் மற்றும் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications