ஆந்திராவில் 2 தமிழக தொழிலாளர்கள் மர்ம மரணம்.. நடந்தது என்ன?.. மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் சித்தேரி ஊராட்சி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ராமன் என்பவரது மகன் ராமன். செவத்தான் என்பவரது மகன் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரின் மரணம் குறித்தும், 26.11.2021 அன்று ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில வனத்துறையினரால் நடத்தப்பட்ட விபத்து குறித்தும், உண்மையை வெளிக்கொணர மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கள ஆய்வின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள், ஆவணங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட "வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு அறிக்கையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளவில் தர்மபுரி - கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில், நாலு ரோடு அருகில், முத்து இல்லம் என்ற இடத்தில் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த தகவலை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications