திமுக -ஓபிஎஸ் கூட்டணி! கட்சியை விட்டே தூக்கியிருக்கணும்! எடப்பாடிக்கு விஸ்வாசம் காட்டும் விஸ்வநாதன்!
திண்டுக்கல் : திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
.
சொல்லி வைத்தார் போல் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சிவி சண்முகம் ஜெயக்குமார் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவராக இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவிய நத்தம் விசுவநாதன் இப்போதோ பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்

கடும் கண்டனம்
திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என அவரது முன்னாள் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்றதும் கட்சி முழுமையாக அவரது கட்டுப்பாட்டுக்குள் வரும். பொதுக்குழு கூட்ட வேண்டும் என்ற கட்சியின் முடிவை ஏற்று அதற்கு ஒப்புதலையும் அளித்தவர் பன்னீர்செல்வம். ஆனால் அதனை நடத்தக்கூடாது எனவும் சரி செய்ததும் அவர்தான். பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நீதிமன்றப் படிகளில் ஏறுவது என பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிடியில் ஓபிஎஸ்
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு பொது குழுவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது எந்த விதத்தில் நியாயம். சாதாரண தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதிலிருந்தே கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த ஓபிஎஸ் முயற்சிப்பது தெரியவருகிறது. ஒற்றைத் தலைமைக்கு வந்தால்தான் கட்சி ஒரு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அது கருணாநிதிக்கு எதிரானது என மிக அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தார். அதேபோல எம்ஜிஆருக்கு பிறகு கட்சி பொறுப்பினை ஏற்ற ஜெயலலிதாவும் கருணாநிதி ஒரு தீய சக்தி அவரை அரசியலில் அகற்ற வேண்டும் என கூறியே அரசியல் செய்தார்.

தொண்டர்கள் கொந்தளிப்பு
இந்த இரு பெரும் தலைவர்களின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கு மாறாக கட்சியை காட்டிக் கொடுக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என பாராட்டுவதும் எந்த விதத்தில் நியாயம். ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் திமுகவுக்கு ஆதரவாக பேசி வருவது. கட்சி தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது நியாயப்படி பார்த்தால் அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்.
Recommended Video

அதிமுகவில் குழப்பம்
இதிலிருந்தே திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் நினைப்பது தெரிகிறது. ஆனால் அவரது எண்ணம் ஈடாகாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் அல்லது ஓபிஎஸ் போன்றவர்களும் அதிமுகவை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றுமையாக பொறுப்பேற்றபின் கட்சி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும்" என மிக கடுமையாக நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications