என்ன வேணா நடக்கலாம்.. 2 "ஸ்பீச்களை" தயார் செய்த ஸ்டாலின்! மோடி விசிட்டில் மாஸ்டர்பிளான்! ஆஹா சூப்பர்
திண்டுக்கல்: காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் இரண்டு உரைகளை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.
இதற்காக பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். மதுரை வந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வந்து பின்னர் காரில் வந்த மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த பட்டமளிப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்தான் முதலில் பேசுவார். இது பல்கலைக்கழக நிகழ்வு என்பதால் இதில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேச மாட்டார். தமிழ்நாட்டின் உயர்கல்வி எப்படி இருக்கிறது, கல்வியில் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது என்று பேசுவார். அதேபோல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் வரலாறு பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த மேடையில் அரசியல் பேச முடியாது.

உரை தயார்
அதன்படியே முதல்வர் ஸ்டாலினின் உரை தயார் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் இன்னொரு உரையையும் நேற்றே அதிகாரிகள் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முதல்வர் பேசுவதற்காக இன்னொரு உரையும் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உள்ளது என்கிறார்கள். இன்று ஆளுநர் ரவி, பிரதமர் மோடி அரசியல் பேசினாலும், தானும் அரசியல் பேச வேண்டும் என்பதற்காக இந்த உரை தயார் செய்யப்பட்டுள்ளது.

2 உரைகள் ஏன்?
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்த இரண்டாம் உரை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டமளிப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்தான் முதலில் பேசுவார். அதன்பின் ஆளுநர் ரவி பேசுவார். அதன்பின் மோடி பேசுவார். அப்படி இருக்கும் போது ஸ்டாலினுக்கு எப்படி ஆளுநர் பேச போகும் விஷயம் என்ன என்று தெரியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் பேச்சுக்கு முன்பாக ஆளுநர் பேச போகும் உரையின் மாதிரி மேடையில் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மேடையில் என்ன நடக்கும்?
அதாவது மேடையில் இருக்கும் முதல்வர், பிரதமர் உள்ளிட்டோருக்கு ஆளுநர் உரையின் மாதிரி அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அந்த மாதிரி உரையில் அரசியல் கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலினும் தனது இரண்டாவது உரையை பயன்படுத்தி அரசியல் பேசும் வாய்ப்புகள் உள்ளன. இன்றைய உரையில் ஆளுநர் ரவி சனாதனம், இந்துத்துவா போன்ற விஷயங்களை பற்றி ஏதாவது குறிப்பிட இருந்தால் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!











Click it and Unblock the Notifications