திண்டுக்கல் பக்கம் திடீர் பரபரப்பு.. உதயமானது கொரோனா மாரியம்மன் கோவில்! கூட்டமாக குவிந்த பக்தர்கள்!
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே மாசாணியம்மன் கோவிலில், கோரோனோ மாரியம்மன் பெயரில், சிலை வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் முருகானந்தம்-வளர்மதி தம்பதியினர் கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீ மாயக்காரி மாசாணியம்மன் என்ற கோவிலை உருவாக்கி, தினந்தோறும் அதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்தனர்.
இந்த கோவிலுக்கு அமாவாசை பவுர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களிலும் மற்றும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

அம்மன் உத்தரவு
அதேபோல் மாதந்தோறும், அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களில் மதிய அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அந்த கோயில் நிர்வாக தம்பதியினருக்கு மாசாணி அம்மனின் அருள் வாக்கில், கொரோனோ மாரியம்மன் என்ற பெயரில் சிலை வைத்து வனங்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி தனியாக கொரோனா மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

பக்தர்கள் கூட்டம்
கொரனோ மாரியம்மனை பல பகுதிகளிலிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றால் கொரோனோ தொற்று உறுதியாக வராது என்று கோவில் பூசாரி தெரிவிக்கின்றார். அதனால் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

நோய் தொற்று பரவாது
நாட்டையே உலுக்கி வரும் நிலையில் இந்த கொரோனோ தொற்று பரவாமல் இருக்க இங்குள்ள கொரோனோ மாரியம்மனை தரிசனம் செய்தால் நோய் தொற்று பரவாது என்று கோவில் பூசாரி உறுதியளித்து கூறுவது பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கோவிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் மற்ற தினங்களில் இந்த கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகியும் பூசாரியும் ஆன முருகானந்தம் தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் அருகே மாசாணியம்மன் கோவிலில், கோரோனோ மாரியம்மன் சிலை வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள் https://t.co/JM5H6LBFih #coronavirus #oddanchatram #temple #tamilnadu pic.twitter.com/jWn4eQq4RD
— Oneindia Tamil (@thatsTamil) January 14, 2022
பிளேக் மாரியம்மன் கோவில்கள்
ஒரு காலத்தில் பிளேக் நோய் தீவிரமாக பரவியபோது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிளேக் மாரியம்மன் என்ற பெயரில் கோவில்கள் கட்டப்பட்டன. மாரி என்பது மழை மற்றும் நோய் என்ற பொருள் தரக்கூடியது. எனவே ஏதாவது ஒரு கொடூர நோய் பரவினால் அதை தீர்க்க மாரியம்மன் உதவி செய்வாள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. அப்படித்தான் இப்போது கோவையை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்திலும் கொரோனா மாரியம்மன் என அம்மனுக்கு பெயரிடப்பட்டுள்ளது என்கிறார்கள், சமய ஆய்வாளர்கள்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications