கார் ஓட்டுனவரு ஹெல்மெட் போடலை? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்! கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்?
திண்டுக்கல் :- உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபீஸர் என்பதுபோல திண்டுக்கல்லில் கார் ஓட்டியவர் மற்றும் காரின் பின்னே அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் போடவில்லை என 200 ரூபாய் அபராதம் விதித்த திண்டுக்கல் காவல்துறையின் செயல் சமூக வலைதளங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவிலான சாலை விபத்துகள் நடப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருந்தது.
சராசரியாக ஒரு நாளைக்கு 300 முதல் 400 சாலை விபத்துகள் பதிவாகும் நிலையில், 10 முதல் 12 பேர் சாலைகளில் தங்கள் உயிரை விடும் அவல நிலை நீடிக்கிறது.

தமிழக காவல்துறை
இதன் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் முக்கிய சாலை சந்திப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு எனப்படும் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்
பின்னர் உரிய அபராதத் தொகையை செலுத்தி வாகனத்தை நாம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். போக்குவரத்து அலுவலர்கள் மட்டுமல்லாது டிராபிக் போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்தி வருகின்றனர். இதில் பல நேரங்களில் பல்வேறு சிக்கல்களும் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
அந்த வகையில்தான் உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபீஸர் என்பதுபோல காரில் பயணம் செய்த ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என கூறி 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது திண்டுக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக மாருதி ஆல்டோ காரை 5 வருடமாக பயன்படுத்தி வருகிறார்.

காருக்கு ஹெல்மெட்
வாகனத்தின் பைனான்ஸ் முடிவடைந்த நிலையில் தனது பெயருக்கு மாற்றுவதற்காக திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கார்த்திகேயன் சென்ற போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 24 ஆம் தேதி கார்த்திகேயன் விதிமீறல் ஈடுபட்டதாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பெயரில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் காரில் பயணம் செய்த கார்த்திகேயன் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதுதான்.

அபராதம் விதிப்பு
காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் தான் அணிய வேண்டும் என்ற விதி இல்லை இருக்கும் நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை போக்குவரத்து காவல்துறையினர் தான் அபராதம் இருப்பார்கள் எனக் கூறினார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் அளித்தும் எந்த பதிலும் கிடைக்காததால் வேறு இன்றி அபராதத் தொகையைக் கட்டி வீடு திரும்பியிருக்கிறார் கார்த்திகேயன்.

பொதுமக்கள் கோரிக்கை
போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டியது காவல்துறையின் கடமை தான் அதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக காரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து தான் செல்ல வேண்டும் எனக் கூறி அபராதம் விதித்து இருப்பது என்ன வகை நியாயம் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் போலீசாரின் இந்த செயலை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications