20 நிமிஷம் லேட்டாக போயிருந்தால், சுவாச குழாய் வெடித்திருக்கும்.. பாகிஸ்தான் வீரர் பகீர்
துபாய்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 67 ரன்கள் விளாசினார். இந்த நிலையில்தான், அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.
Recommended Video
நெஞ்சில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தியரான ஒரு மருத்துவர்தான், அவருக்கு சிகிச்சை வழங்கினார்.
அரையிறுதியில் இவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடிய முகமது ரிஸ்வான் ஆட்டம், பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அவரது அர்ப்பணிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சுவாச பிரச்சினை
இதுகுறித்து ரிஸ்வான் நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சுவாசமே விடமுடியாத நிலை இருந்தது. மூச்சு குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் தெரிவித்தனர்.

டிஸ்சார்ஜ்
அவர்கள் வேறு எதுவும் தெரிவிக்கவில்லை. காலைக்குள் உடல்நிலை தேறிவிடும் என்றும், டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்றும் தெரிவித்தனர். ஆனால், மாலையில், அடுத்த நாள் மாலைதான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும் என்று கூறினர். ஏன் இவ்வளவு மோசமாகிவிட்டது என எனக்கு புரியவில்லை. அப்போதுதான், நர்ஸ் ஒருவரிடம் நான் கேட்டேன். 20 நிமிடங்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்திருந்தால், எனது இரு காற்றுக் குழாய்களும் வெடித்திருக்கும் என்று நர்ஸ் கூறினார்கள்.

இரு நாட்கள் சிகிச்சை
இரு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக, டாக்டர் தெரிவித்தார். அவ்வப்போது எனக்கு பரிசோதனைகள் நடத்தினார்கள். ஆனால் எனது மனதில் ஓடியதெல்லாம் எப்போது வெளியே போவேன், எப்போது கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை பற்றிதான். எனக்கு சிகிச்சையளித்த இந்திய மருத்துவர், நான் அரையிறுதியில் விளையாட வேண்டும் என்று ஆசைபடுவதாக தெரிவித்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.

விரைவாக சரியானது
அதேநேரம், நான் விளையாடும் நிலையில் இல்லை என்று அவர் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்தேன். விளையாடினால் ரிஸ்க் ஏற்படும் என்று அவர் கூறினார். இருப்பினும் சிகிச்சை வேகமாக பலன் கொடுத்து விளையாட முடிந்தது. இவ்வாறு ரிஸ்வான் தெரிவித்தார். இவ்வாறு ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications