'ரன் மெஷின்'.. கிறிஸ்கெய்லின் 6 வருட சாதனையை அசால்டாக முறியடித்த பாகிஸ்தான் வீரர்.. செம பேட்டிங்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்ப தயாராகி விட்டது. இந்த தொடரில் இந்தியா வெளியேற முதல் படி அமைத்து கொடுத்த பாகிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக நிற்கிறது.
நேற்று இரவு தனது கடைசி லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை சந்தித்தது பாகிஸ்தான். டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. எதிர்பார்த்தபடியே ஸ்காட்லாந்து பவுலர்கள் பந்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடித்து துவம்சம் செய்தனர்.

பாகிஸ்தான் அபார வெற்றி
20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தனர். கேப்டன் பாபர் அசாம் 47 பந்துகளில் 66 ரன் கள் எடுத்தார். மூத்த வீரரான சோயிப் மாலிக் வெறும் 18 பந்துகளில் 6 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார். பின்பு வழக்கம்போல் பாகிஸ்தானின் அசுர பந்துவீச்சுக்கு அடிபணிந்த ஸ்காட்லாந்து வீரர்கள் 117 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரன் மெஷின் முகமது ரிஸ்வான்
இந்த போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன் எடுத்து அவுட்டானார். முன்னதாக அவர் 5-வது ரன்னை எடுத்தபோது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை ஒரு முறியடித்தார். அதாவது 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனைக்கு முகமது ரிஸ்வான் சொந்தக்காரர் ஆனார்.

கிறிஸ் கெய்ல் சாதனை முறியடிப்பு
கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டு 36 ஆட்டத்தில் விளையாடி 1,665 ரன் எடுத்தார். சராசரி 59.46 ஆகும். இதில் 3 சதமும், 10 அரைசதமும் நொறுக்கினார். அதிகபட்சமாக 151 ரன் குவித்தார். கிறிஸ்கெய்லின் இந்த 6 ஆண்டு கால சாதனையைதான் முகமது ரிஸ்வான் தற்போது முறியடித்துள்ளார். முகமது ரிஸ்வான் இந்த ஆண்டில் 1,676 எடுத்துள்ளார். அதாவது கிறிஸ் கெய்ல் எடுத்த ரன்னை தாண்டி விட்டார்.

இந்தியாவை கலங்கடித்தவர்
இந்த ஆண்டில் 1 சதமும், 15 அரை சதமும் நொறுக்கியுள்ள முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 104 ரன்கள் குவித்தார். இந்தியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் 79 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications