ஓடை நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்த திமுக மாவட்ட கவுன்சிலர்! 1.50 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் 30 ஆண்டுகளாக அரசு நிலத்தை திமுக மாவட்ட கவுன்சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1.50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இதனால் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் திமுக பிரமுகரிடம் இருந்து 1.50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஓடை நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடப்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் திமுகவில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தின் அருகே 2.50 ஏக்கர் ஓடை புறம்போக்கு நீர் வழித்தடத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு பயிர்களை பயிரிட்டு வந்துள்ளதாக கூறப்டுகிறது.

மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
இதனால் மழை காலத்தில் ஓடை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மழைநீர் விவசாய நிலத்தில் தேங்குவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதாவது ஆக்கிரமிப்பு தொடர்பாக வருவாய்த்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

1.50 ஏக்கர் நிலம் மீட்பு
இதையடுத்து வருவாய் துறையினர், நில அளவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சதாசிவம் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மூலம் நிலத்தை சமன் செய்து முதற்கட்டமாக 1.50 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தொடர் நடவடிக்கை
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கிடையே தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications