பரபரக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது
ஈரோடு: அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் தொடங்க உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா.
அண்மையில் திடீர் உடல்நலக் குறைவால் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து சட்டசபை தேர்தல்களுடன் பிப்ரவரி 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27-ந் தேதி பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அதிமுகவின் உட்கட்சி மோதலால் எந்த அணியும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதிமுகவின் முடிவுகளுக்காக பாஜகவின் தெளிவான நிலைப்பாடும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31-ந் தேதி தொடங்க உள்ளது. நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7. இதனையடுத்து மறுநாள் பிப்ரவரி 8-ல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும். அனைத்து வேட்புமனுக்களையும் திரும்பப் பெற பிப்ரவரி 10-ந் தேதி கடைசி நாளாகும்.
வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்டுப்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணிவரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வரும் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications