துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் துரோகம், பதவி வெறி, சுயநலம் ஆகியவற்றை உணர்ந்து கொங்கு மாவட்ட மக்கள் இடைத்தேர்தல் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதேபோல் இரட்டை இலை சின்னம் செயல்படாமல் இருக்க எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்த உள்ளனர்.

அமமுக போட்டி
அதுமட்டுமல்லாமல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சார்பாக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமமுகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கடந்த 20 மாதங்களாக திமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என ஏராளமான பாதிப்புகள் இருக்கின்றன. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் திமுக எதையுமே நிறைவேற்றவில்லை. அதற்கு தயாராகவும் இல்லை.

நம்பிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை என்ன தான் ஆட்சி அதிகாரம், கூட்டணி பலம் இருந்தாலும், மக்கள் எப்படி ஆர்கே நகர் தேர்தலில் வாக்களித்தது போல், ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

இபிஎஸ்-க்கு பாடம்
தொடர்ந்து அதிமுகவின் இடைத்தேர்தல் செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி பணபலத்தை நம்பி ஈரோடு கிழகு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னம் செயல்படாமல் இருக்க எடப்பாடி பழனிசாமியே காரணம். அதனால் கொங்கு மாவட்ட மக்கள் எடப்பாடி பழனிசாமியின் துரோகம், பதவி வெறி, சுயநலம் உணர்ந்து அவருக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். என்ன தான் பணபலம் இருந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

அமமுக வெற்றிவாய்ப்பு
தொடர்ந்து அமமுகவின் வெற்றிவாய்ப்பு பற்றிய கேள்விக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரிய அளவில் எங்களுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications