ஹைதராபாத்தில் கணவனுக்கு கடைசி புத்தாண்டு பார்ட்டி.. காதலனுக்காக பரலோகம் அனுப்பி வைத்த மனைவி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மீர்பேட் அருகே கணவன் காணாமல் போன நிலையில், போலீஸில் புகார் அளிக்கவே இல்லை. ஆனால் அவரது உடல் ஹைதராபாத்தின் மீர்பேட் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 2-ந்தேதி மீட்கப்பட்டது. மனைவியை பிடித்த விசாரித்த போது, கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. புத்தாண்டு தினத்தில் பார்ட்டி என்ற பெயரில் குடிக்க வைத்து கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டது தெரியவந்தது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மீர்பேட் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. இறந்த உடலை மீட்டு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அதே பகுதியில் வசித்து வந்த நாராயண பெஹரா (வயது 32) என்பது தெரியவந்தது. மர்ம மரணம் என்ற வகையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், அவருக்கு பந்திதா (வயது 27) என்ற மனைவி இருப்பதை கண்டுபிடித்தார்கள்.

மீர்பேட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார் பந்திதா. ஒடிசாவை சேர்ந்த இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறார். பந்திதா, தனது கணவர் மாயமானது குறித்து ஏன்போலீசில் புகார் செய்யவில்லை, அவரை எப்போதிருந்து காணவில்லை, உங்களிடம் கடைசியாக எப்போது தொடர்பு கொண்டார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் கேட்டுள்ளார். அப்படி போலீசார் நடத்திய விசாரணையின் போது, பந்திதா, முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறியிருக்கிறார்.
இதனால் பந்திதா மீது போலீசாரின் சந்தேகம் அதிகமானது. இதனால் தங்கள் பிடியை இறுக்கி துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது கணவரை தானே தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை பந்திதா ஒப்புக் கொண்டார். ஏன் கொலை செய்தார் என கேட்டபோது, தனக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வித்யாசாகருக்கும் இருந்த கள்ளக்காதல் விகாரத்தை தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து இளைஞரின் மர்ம மரணம் கொலை வழக்காக மாற்றி கள்ளக்காதல் விவகாரத்துடன் சேர்த்து விசாரித்தனர் அபப்போது பந்திதா கூறுகையில், "பீகாரை சேர்ந்த 25 வயதாகும் வித்யாசாகர் வெல்டராக வேலை பார்க்கிறார். ஒரே பகுதியில் அருகருகே வசித்த அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்கள். ஆனால் அடிக்கடி சந்தித்து பேச கணவர் இடையூறாக இருந்தாராம். அவருக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பந்திதா கள்ளக்காதலனிடம் தனது பயத்தை தெரிவித்துள்ளார்.
இதனால் இருவரும் சேர்ந்து நாராயணாவை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டி உள்ளார்கள். இதற்காக புத்தாண்டு தினத்தில் பார்ட்டி என்ற பெயரில் நாராயணாவை அழைத்து வித்யாசாகர் குடிக்க வைத்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய நாராயணாவுடன், பந்திதா வேண்டுமென்றே சண்டைபோடுவதுபோல தகராறு செய்து கணவரை வம்புக்கு இழுத்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கினாராம்.
அந்த சமயம் வீட்டுக்கு அருகே பதுங்கியிருந்த வித்யாசாகரும் வந்து சேர்ந்து தாக்கி நாராயணாவை கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை இருவரும் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொண்டு போட்டார்களாம். இந்த தகவலை வாக்குமூலமாக பந்திதாக கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், பந்திதாவும், அவரது கள்ளக்காதலன் வித்யாசாகரும் ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications