பாஜகவுக்கு ‛செக்’.. தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ்.. தசராவில் புதிய கட்சி.. பெயர் இதுதானாம்
ஐதராபாத்: தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புதிதாக அணி உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அக்டோபர் 5ம் தேதி தசரா தினத்தில் புதிய கட்சியை அறிவிக்க உள்ளார். கட்சியின் பெயர் உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக சந்திர சேகரராவ் உள்ளார். ஒரு காலத்தில் பாஜக-தெலங்கானா ராஷ்டரிய சமீதி கட்சி கூட்டணியில் இருந்தது. ஆனால் தற்போது இருகட்சிகள் இடையே கடும் வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. அதோடு பிரதமர் மோடி உடனான சந்திப்பையும் சந்திர சேகரராவ் தவிர்த்து வருகிறார்.
மேலும் சந்திரசேகரராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார்.

நிதிஷ் குமாருடன் சந்திப்பு
சில மாதங்களுக்கு முன்பு சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரேவை சந்திரசேகரராவ் சந்தித்தார். அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பீகார் முதல் அமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரை சந்தித்து பேசினார். இதேபோல் இன்னும் பிற எதிர்க்கட்சி தலைவர்களை சந்திரசேகரராவ் சந்தித்து பேச உள்ளார். அதோடு 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக சந்திரசேகரராவ் விரைவில் புதிய கட்சி துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தசரா தினத்தில் புதிய கட்சி
சந்திரசேகரராவின் இந்த புதிய கட்சி அறிவிப்பு என்பது கடந்த ஏப்ரலில் வெளியாகும் என எதிர்கபார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிப்போனது. இந்நிலையில் தான் புதிய கட்சியை தசரா தினமான அக்டோபர் மாதம் 5ம் தேதி சந்திரசேகரராவ் அறிவிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் பெயர் என்ன?
மேலும் சந்திர சேகரராவ் தேசிய அரசியலுக்காக கட்சி துவங்குவதால் அதற்கு ‛பாரத் ராஷ்ட்ர சமீதி' (Bharat Rashtra Samithi or BRS) என்ற பெயரில் கட்சி துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுதெடார்பாக விவாதித்து இன்னும் 2 வாரத்துக்குள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த திட்டம் என்ன?
தேசிய அரசியலுக்காக புதிய கட்சியை அடுத்த மாதம் துவங்கினாலும் கூட சந்திரசேகரராவ் தொடர்ந்து தெலங்கானா முதல் அமைச்சராக இருப்பார். அதன்பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது சந்திரசேகரராவ் அதில் போட்டியிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியை புதிய கட்சியான ‛பாரத் ராஷ்ட்ர சமீதி' உடன் இணைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications