பாருங்க! 15 வாட்ச்மேன் பணியிடத்திற்கு 11,000 இளைஞர்கள் விண்ணப்பம்! லைனில் இன்ஜினியர்கள், பட்டதாரிகள்
போபால்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வேலையின்மை என்பது தீராத தலைவலியாக உள்ளது. அதுவும் கொரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்து விட்டதாக பல்வேறு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்த புள்ளி விவரங்கள் உண்மைதான் என்பதை மத்திய பிரதேசம் நிரூபித்துள்ளது. அந்த மாநில அரசு தேர்வுத்துறை குவாலியர் பகுதியில் பியூன்கள், டிரைவர்கள் மற்றும் காவலாளிகளுக்கான 15 பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

15 பணியிடங்களுக்கு 11,000 இளைஞர்கள் திரண்டனர்
10-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் வெறும் 15 பணியிடங்களுக்கு 11,000 இளைஞர்கள் விண்ணப்பங்களுடன் திரண்டனர். 10-ம் வகுப்பு படித்தவர்கள் போதும் என்ற நிலையிலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள், எம்பிஏ படித்தவர்கள், சிவில் நீதிபதி ஆர்வலர்கள் என மெத்த படித்தவர்களும் விண்ணப்பங்களுடன் திரண்டு வந்தனர்.

பாஜக ஆளும் மாநிலம்
இதில் கொடுமை என்னவென்றால் மத்திய பிரதேசம் மட்டுமில்லாது அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்தும் இளைஞர்கள் திரண்டு வந்ததுதான். இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். விண்ணப்பிக்க வந்தவர்களின் ஒருவரான அஜய் பாகேல் என்பவர் ''நான் அறிவியல் பட்டதாரி, நான் பியூனுக்கு விண்ணப்பித்துள்ளேன். பிஎச்டி படித்தவர்கள் இங்கே வரிசையில் உள்ளனர்'' என்று மாநிலத்தின் வேலையின்மையை வெளிச்சம் போட்டு காட்டினார்.

1 லட்சம் அரசுப் பணியிடங்கள்
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 1 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், சுமார் 32 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் 30,600 காலி பணியிடங்கள், உள்ளாட்சித் துறையில் 9,388 , சுகாதாரத் துறையில் 8,592, வருவாய்த் துறையில் 9,530 என்று காலி பணியிடங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் அரசு வேலைகளுக்கு கூட ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு இதுவே காரணம் என்று வேலை தேடுபவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

95 பேர் தற்கொலை
சமீபத்தில் மத்திய பிரதேச அரசின் தெருவோர வியாபாரிகள் திட்டத்திற்கு சுமார் 15 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 99,000 பேரில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் மட்டும் வேலையின்மை காரணமாக 95 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications