அருணாச்சல்: ஊடுருவிய சீனா- உக்கிரமாக தடுத்து நிறுத்திய சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட்ஸ்- பரபர தகவல்
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை நமது ராணுவத்தின் சீக்கிய மற்றும் ஜாட் ரெஜிமெண்ட் படைகள் தடுத்து நிறுத்தியதாகவும் நமது தரப்பில் 20 வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அருணாச்சல பிரதேச மாநில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் 200க்கும் அதிமான சீன ராணுவத்தினர் டிசம்பர் 9-ந் தேதி ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.

சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட்ஸ்
இந்திய ராணுவத்தின் சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட் பிரிவினரே சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தினர். சீன ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடியும் கொடுத்தனர். இதில் நமது வீரர்கள் 20 பேர் படுகாயமடைந்தனர். 6 ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் அஸ்ஸாமிக் குவஹாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்.10-ல் பேச்சுவார்த்தை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இருதரப்பு இடையே டிசம்பர் 10-ந் தேதி பூம்லா என்ற இடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தற்போது இருதரப்பும் மோதல் நிகழ்விடத்தில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு தங்களது எல்லைகளுக்கு திரும்பி உள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அருணாச்சல பிரதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கால்வன் மோதல்
கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ள 2-வது பெரிய சம்பவம் இது. கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் சீனா தரப்பில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

டோக்லாம் மோதல்
முன்னதாக பூட்டானின் டோக்லாம் பீடபூமியை ஆக்கிரமிக்க சீனா முயன்றது. டோக்லாம் பீடபூமியானது இந்தியாவுக்கு பாதுகாப்பு அடிப்படையில் முக்கியமானது. அதனால் டோக்லாம் பாதுகாப்பில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது. டோக்லாமை ஆக்கிரமிக்க சீனா முயன்ற போது இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இருதரப்பு இடையே கைகலப்பு மோதல் நடந்தது. டோக்லாம் பீடபூமியை கைப்பற்றிவிட்டால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குள் எளிதாக நுழைந்துவிடலாம் என்பது சீனாவின் வியூகம். இந்த வியூகத்தை நமது ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்திருந்தனர். இந்த நிலையில்தான் இன்று நேரடியாக அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாருக்கு குறிவைத்திருக்கிறது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications