மீரட் பொருட்காட்சி தீவிபத்து – நீதிபதி சின்ஹா தலைமையில் ஒரு நபர் கமிஷன்
டெல்லி: உத்தர பிரதேச மாநில மீரட் நகரில் நடைபெற்ற தீவிபத்து குறித்த விரிவான விசாரணைக்கு நீதிபதி தலைமையிலான ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தினைப் போலவே இந்தியாவையே அதிரவைத்த மற்றொரு விபத்து, மீரட் நகரில் நடைபெற்ற தீவிபத்தாகும்.
2006 ஆம் ஆண்டு மீரட்டில் அமைந்துள்ள விக்டோரியா பூங்காவில் வர்த்தகப் பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. அப்பொருட்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 60 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி எஸ்.பி சின்ஹா தலைமையில் ஒரு நபர் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
மேலும், உ.பி அரசு இடைக்கால நிவாரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் உதவித்தொகையாக வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த குழு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் தங்கள் அறிக்கையை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications