யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி
யுக்ரேன் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம் நிறைவடையும் நாளில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும் யுக்ரேன் கூறியுள்ளது.
யுக்ரேன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி ஒன்றில் வந்துகொண்டிருந்த 5 பேர் தீப்பிடித்து எரிந்து இறந்தனர். இந்த தாக்குதலில் இறந்தவர்களுள் ஒரு 11 வயது சிறுவனும் அடக்கம்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு நடுவே இந்த தாக்குதலைப் பற்றி அறிவித்தார் யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி. 50 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இது பற்றி இதுவரை ரஷ்யா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
குடிமக்கள் தொடர்புடைய கட்டுமானங்களை குறிவைத்துத் தாக்குவது குறித்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துவருகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் பற்றி தமக்குத் தெரியவந்ததாகவும், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு ரஷ்யா இப்படித்தான் தயாராகியுள்ளது என்றும் ஸெலன்ஸ்கி கூறினார்.
இந்த தாக்குதலில் 4 பயணிகள் ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்ததாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் மாதம் மற்றொரு ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
புதன்கிழமை தங்கள் நாட்டின் விடுதலை நாளை யுக்ரேன் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தை கெடுக்க ரஷ்யா கொடூரமாக எதையாவது செய்யும் என்று முன்கூட்டியே கூறியிருந்தார் ஸெலன்ஸ்கி.
- தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வுக்கு நிபந்தனையுடன் தடை விதித்த உயர் நீதிமன்றம்: என்ன காரணம்?
- நரேந்திர மோதி பாதுகாப்பு படையில் இடம்பிடிக்கும் 'முதோல்' வேட்டை நாய்
ஸாப்போரீஷியா அணு உலையை போர்ப் பிராந்தியமாக ரஷ்யா மாற்றிவிட்டதாகவும் இதன் மூலம் ஐரோப்பாவின் மக்களையும், தாவரங்களையும் அது ஆபத்துக்கு உள்ளாக்கிவிட்டதாகவும், உலகை கதிர்வீச்சுப் பேரழிவின் முனையில் நிறுத்திவிட்டதாகவும் முன்னர் கூறியிருந்தார் ஸெலன்ஸ்கி.
உணர்ச்சியற்ற இந்தப் போர், யுக்ரேனிலும், யுக்ரேனுக்கு வெளியேயும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறினார்.
யுக்ரேன் விடுதலை நாளை ஒட்டி பல நாடுகளில் மக்கள் தெருக்களில் கூடி அந்நாட்டுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். உலகத் தலைவர்களும் இந்த சந்தர்ப்பத்தில் யுக்ரேனுக்கு தங்கள் ஆதரவை வெளியிட்டனர்.
முன்கூட்டி அறிவிப்பு இல்லாமல் தலைநகர் கீயவ் சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேனுக்கு 6.35 கோடி டாலர் ராணுவ உதவி அளிப்பதாக அறிவித்தார். ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டுக்கு 300 கோடி டாலர் கூடுதலாக உதவி அறிவித்தார். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபின்லாந்து, போலந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் உதவிகள் அறிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன














Click it and Unblock the Notifications