காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு- 3 பேர் பலி; 16 பேர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் தீவிரவாதிகளை அனுப்பியும் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல்களை தூண்டியும் விட்டு வருகிறது.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவுக்குள் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் உயிரோடு பிடிபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்.எஸ். புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. ஆர்.எஸ். புரா மற்றும் அர்னியா செக்டாரில் துப்பாக்கி மற்றும் மோட்டார் பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திஉள்ளது.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து இருதரப்பு இடையே சண்டை நடபெற்று வருகிறது.
Three killed, 16 injured in shelling by Pakistani troops along IB in Jammu district: Officials.
— Press Trust of India (@PTI_News) August 28, 2015 பாகிஸ்தான் ராணுவமானது பொதுமக்களின் குடியிருப்பு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications