நாங்களா 420.. தினகரனுக்குத்தான் அது பொருத்தம்... போட்டுத் தாக்கும் முதல்வர் எடப்பாடி!
மோசடி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் டிடிவி தினகரன் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மோசடி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் டிடிவி தினகரன் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் இருந்தபடி நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார் டிடிவி தினகரன்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஃபோர்ஜரி, அவர் ஒரு 420 என விளாசினார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் ஒன்றும் மக்கள் மன்றத்தில் ஒன்றும் ஃபோர்ஜரி போல் பேசுவதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் வைத்து வெளுத்த எடப்பாடியார்
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தப் பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரன் 420 என குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர்.

420க்குப் பொருத்தமானவர் அவர்தான்
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி 420 என்பது டிடிவி தினகரனுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்றார். மேலும் கடந்த 3 மாதங்களாக டிடிவி தினகரன் பார்த்து வரும் வேலைகள் உங்களுக்கே தெரியும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.

மாறி மாறி தாக்கு
டிடிவி தினகரனும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மாறி மாறி 420, போர்ஜரி, மோசடி என பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வட்டாரத்தை இது மேலும் சூடாக்கியுள்ளது.

என்னவோ நடக்கப் போகுதோ
இன்று தினகரன், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியார் தரப்பு மாறி மாறி பல்வேறு புகார்களைக் கூறி வருகின்றன, சாடி வருகின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது என்னவோ நடக்கப் போவதாக அதிமுகவினர் கவலையுடன் காத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications