சுதந்திர தினத்திலும் பாக், ராணுவம் அத்துமீறல்.. ஜம்மு எல்லை கிராமங்கள் மீது குண்டுவீச்சு..5 பேர் பலி
ஜம்மு : நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய முகாம்கள் மற்றும் எல்லைப்பகுதி கிராமங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் படைகள் கடந்த ஒரு வார காலமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள இந்திய முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

7-வது நாளாக இன்று ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் உள்ள இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் படைகள் மோர்ட்டர் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இந்திய படைகளும் தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தான் படைகள் தாக்கியதில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தது, இருதரப்பு நட்புறவு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான அடித்தளமாக கருதப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அதை சீர்குலைக்கும் வகையில் எல்லையில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் 32 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை பாகிஸ்தான் வீரர்கள் 60 மிமீ மற்றும் 82 மிமீ ரக மோர்ட்டார் குண்டுகளை மாண்டி, ஹமிர்பூர் மற்றும் சாஜியான் செக்டார்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வீசி அத்து மீறியுள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வரும் 23 மற்றும் 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications