புதுக்கட்சி தொடங்கினார் முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக்கப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் அம்மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரண்குமார் ரெட்டி.
ஆனால், எதிர்ப்புகளையும் மீறி கடந்த மாதம் 19ம் தேதி தெலுங்கானா குறித்தான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி.
தெலுங்கானா பிரச்சினைக்காக நீதிமன்ற உதவியை நாடிய கிரண்குமார் நேற்று புதுக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரண்குமார் ரெட்டி கூறியதாவது:-
ஆந்திரத்தை மத்திய அரசு பிரித்த விதத்தால் தெலுங்கு பேசும் மக்களின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில மக்களின் சுயமரியாதையை நிலைநிறுத்தும் வகையில், புதிய கட்சியை நாங்கள் தொடங்குகிறோம். புதுக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் கடலோர ஆந்திரத்தில் உள்ள ராஜமுந்திரி நகரில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
சீமாந்திர தேர்தல் களத்தைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆந்திர மாநிலத்தை சுமார் 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடுவால் மாநிலம் ஒற்றுமையாக இருப்பதற்குக் குரல் கொடுக்க இயலவில்லை. இது அவமானகரமானது.
ஒருமித்த ஆந்திரத்தையே தாங்கள் ஆதரிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி காட்டிக் கொண்டாலும், மாநிலம் பிரிக்கப்படுவதையே அவர் உண்மையில் ஆதரிக்கிறார். அப்போதுதான் சீமாந்திரத்தில் முதல்வராக முடியும் என்று அவர் கணக்கு போடுகிறார்' என இவ்வாறு அவர் கூறினார்.
தனது புதுக் கட்சி அறிவிப்பை ஹைதராபாதில் கிரண்குமார் ரெட்டி வெளியிட்ட போது அவருடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில எம்.பி.க்களும் உடன் இருந்தனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications