டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மகேந்திர யாதவ் வன்முறைக்கு தலைமை தாங்கியதாக கைது
டெல்லி: டெல்லியில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் விகாஸ்புரி எம்.எல்.ஏ மகேந்திர யாதவ், வன்முறை மற்றும் அரசு ஊழியரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.டெல்லியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதையடுத்து குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி நிகார் விகார் பகுதியில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர யாதவ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு வாகனத்தை தீ வைத்து எரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.எல்.ஏ மகேந்திர யாதவை கைது செய்தனர். டெல்லியில் கைது செய்யப்படும் 6 ஆவது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக காவல்துறை இணை கமிஷனர் தேவேந்திர பதக் கூறுகையில், "வன்முறை, தீ வைத்தல், அரசு ஊழியரை தாக்குதல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம்.எல்.ஏவை கைது செய்துள்ளோம். போராட்டக்காரர்களை சமாதானம் செய்ய முயன்றபோது காவல்துறையினருடன் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
இவர்களின் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளியை கைது செய்துவிட்டோம். ஆனால், காவல்துறை கைது செய்ய மறுத்துவிட்டதாக வதந்தி பரவியதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.வை கைது செய்ததுடன் பலரிடம் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications